Tejashwi Yadav: பீகார் சட்டமன்ற தேர்தலில் 243 தொகுதிகளிலும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் போட்டியிட விரும்புகிறது என அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். இதன் பின்னணி என்ன?
Tejashwi Yadav: பீகார் சட்டமன்ற தேர்தலில் 243 தொகுதிகளிலும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் போட்டியிட விரும்புகிறது என அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். இதன் பின்னணி என்ன?
Published on: September 15, 2025 at 8:17 pm
பாட்னா, செப்.15, 2025: பீகாரில் இரண்டு பெரிய எதிர்க்கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் காங்கிரஸ் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. பீகார், சட்டப்பேரவை தேர்தலுக்கு இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் சீட் பங்கீடு விவகாரத்தில் இருவரும் மல்லுகட்டுகின்றனர். இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி, தொகுதி பங்கீடு குறித்து கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வரும் நிலையில், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக யாரையும் முன்னிறுத்த தயங்குவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் வரிசையில் முதல்வராக அதிக வாய்ப்புள்ளவராகக் கருதப்படும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று கூறி தனது கூட்டணிக் கட்சி மீது மீண்டும் அழுத்தம் கொடுத்துள்ளார். அதாவது, முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள கந்தி என்ற பகுதியில் நடந்த ஒரு நிகழ்வில், மாநில எதிர்க்கட்சித் தலைவர் (LoP), “243 இடங்களிலும் போட்டியிடுவார்” என்றார்.
ராகுல் காந்தியின் வாக்காளர் அதிகார யாத்திரையின் வெற்றியைப் பெற்றதன் பின்னணியில், காங்கிரஸ் கடந்த முறை போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கையைப் போல குறைந்தது 70 தொகுதிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது. ஆனால், இம்முறை காங்கிரஸிற்கு அத்தனை தொகுதிகளை விட்டுக்கொடுக்க ஆர்.ஜே.டி தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வக்ஃப் திருத்தச் சட்டம்.. உச்ச நீதிமன்றம் இறக்கிய பேரிடி.. எதெற்கெல்லாம் தடை தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com