Waqf Act In Supreme Court: ‘இந்து வாரியங்களில் முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுவார்களா?’ என வக்ஃப் சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
Waqf Act In Supreme Court: ‘இந்து வாரியங்களில் முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுவார்களா?’ என வக்ஃப் சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
Published on: April 17, 2025 at 10:44 am
புதுடெல்லி, ஏப்.17 2025: வக்ஃப் திருத்தச் சட்டம், 2025 இன் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தொடரப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் மீதான நேற்று (ஏப்.16 2025) விசாரணையின் போது, முஸ்லிம்கள் இந்து மத அறக்கட்டளைகளில் ஒரு பகுதியாக இருக்க அனுமதிக்கப்படுவார்களா என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் வினவியது.
அதாவது, அரசியலமைப்பு செல்லுபடியாகும் வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தக் கேள்விகளை எழுப்பியது.
மேலும், சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களையும் சேர்க்க வழிவகை செய்கின்றன என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, “மிஸ்டர் மேத்தா, முஸ்லிம்கள் இந்து அறக்கட்டளை வாரியங்களில் ஒரு பகுதியாக இருக்க அனுமதிப்பதாக நீங்கள் கூறுகிறீர்களா? அதை வெளிப்படையாகச் சொல்லுங்கள்” என்றார்.
மேலும், மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், “பல்வேறு மசூதிகள் 14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை என்றும், அவர்களிடம் பத்திரங்களை சமர்ப்பிக்கக் கோருவது சாத்தியமற்றது” என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.
வக்ஃப் சட்டம் 2025
மத்திய அரசு சமீபத்தில் வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025 ஐ கொண்டுவந்தது. இதைத் தொடர்ந்து, இரு அவைகளிலும் சூடான விவாதங்களைத் தொடர்ந்து இந்தத் திருத்தச் சட்டம் ஏப்ரல் 5 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். இந்தச் சட்டத்தை எதிர்த்து திமுக, காங்கிரஸ், த.வெ.க, சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளன.
இதையும் படிங்க : உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்? வெளியான தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com