Ali Khan Mahmudabad: அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலி கான் மக்முதாஃபாத்துக்கு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Ali Khan Mahmudabad: அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலி கான் மக்முதாஃபாத்துக்கு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on: May 21, 2025 at 5:59 pm
புதுடெல்லி, மே 21 2025: ஹரியானா காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத்துக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (மே 21 2025) இடைக்கால ஜாமீன் வழங்கியது.
ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்திய இராணுவத்தின் பதிலடியான ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து இவர் தெரிவித்த கருத்துக்கள் ஆட்சேபத்துக்குள்ளான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை விசாரிக்க, ஹரியானாவில் வசிக்காத மூன்று மூத்த அதிகாரிகள், ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி உட்பட, டிஜிபி அந்தஸ்து கொண்ட அதிகாரி தலைமையில் குழு அமைக்கவும் உத்தரவிட்டது.
மேலும், இந்த குழுவை 24 மணி நேரத்துக்குள் அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, விசாரணையை எளிதாக்குவதற்காக மட்டுமே ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : பெண் ராணுவ அதிகாரிகள் குறித்து அவதூறு: பேராசிரியர் அலி கான் மக்முதாஃபாத்துக்கு நீதிமன்ற காவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com