The drying Ganga river: கங்கை நதி வறண்டு வருவதாக புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
The drying Ganga river: கங்கை நதி வறண்டு வருவதாக புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Published on: September 24, 2025 at 11:29 am
Updated on: September 24, 2025 at 11:37 am
புதுடெல்லி, செப்.24, 2025: கங்கை நதிக் கரையில் 600 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசித்துவருகின்றனர். மேலும், இந்த நதி தெற்காசியாவின் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தின் மையமாக உள்ளது.
இந்த நதி வறண்டு வருகிறது என்று ஐஐடி காந்திநகர் மற்றும் அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வு நதியின் நீரோட்டத்தை மறுகட்டமைத்துள்ளது. அதாவது, 1990 களில் இருந்து நீர் ஓட்டத்தில் ஏற்பட்டுள்ள சரிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த வறட்சியை நோக்கி நகர்கிறது எனக் கூறப்படுகிறது. இதற்கு, பலவீனமான கோடை பருவமழை, நிலம் மற்றும் நீர் பயன்பாட்டில் மனிதனால் இயக்கப்படும் மாற்றங்கள் முதன்மை காரணமாக உள்ளன என்றும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி பரந்த காலநிலை மாற்றமும் கங்கை நதியில் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கு முக்கிய காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதில் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 1300 ஆண்டுகளில் இல்லாத வகையில் கங்கை நதி வேகமாக வறண்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நாட்டில் வேலைவாய்ப்பின்மை, ஊழல் அதிகரிப்பு.. ராகுல் காந்தி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com