Cheating case against Shaadidotcom: ஷாதி.காம் (Shaadi.com) நிறுவனத்தின் பயனர் ஒருவர், திருமண வலைத்தளம் மூலம் சந்தித்த ஒருவரால் ஏமாற்றப்பட்டதாகக் கூறியுள்ளார். இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Cheating case against Shaadidotcom: ஷாதி.காம் (Shaadi.com) நிறுவனத்தின் பயனர் ஒருவர், திருமண வலைத்தளம் மூலம் சந்தித்த ஒருவரால் ஏமாற்றப்பட்டதாகக் கூறியுள்ளார். இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Published on: June 27, 2025 at 12:50 pm
டெல்லி, ஜூன் 27 2025: திருமண வலைத்தளத்தைப் பயன்படுத்தி ஒரு பெண்ணை ஏமாற்றியதாகக் கூறப்படும் ஒரு ஆணின் விவரங்களைச் சரிபார்க்கத் தவறியதாக ஷாதி.காம் நிறுவனர் அனுபம் மிட்டல் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஷாதி.காம் நிறுவனர் அனுபம் மிட்டல் மீதான குற்றவியல் நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூன் 26 2025) நிறுத்திவைத்தது.
முன்னதாக இந்த வழக்கை தெலங்கானா உயர் நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதையடுத்து அனுபம் மிட்டல் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இந்த நிலையில், தெலுங்கானா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மிட்டல் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்தீப் மேத்தா மற்றும் ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
புகார் என்ன?
ஷாதி.காம் மூலமாக பெண் ஒருவர் ஆணை சந்தித்துள்ளார். இந்த நிலையில் அந்த ஆண், திருமணம் செய்துக் கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிவிட்டார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய மறுத்த நிலையில் ஷாதி.காம் நிறுவனர் அனுபம் மிட்டல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சிறுநீர் மூலம் கண்களை சுத்தப்படுத்திய பெண்; வீடியோ வைரல்.. மருத்துவர்கள் ஷாக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com