Rs 100 crore scam from Tirupati temple: ஜெகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் திருப்பதி கோயிலில் இருந்து ரூ.100 கோடி ‘பரகமணி ஊழல்’ நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Rs 100 crore scam from Tirupati temple: ஜெகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் திருப்பதி கோயிலில் இருந்து ரூ.100 கோடி ‘பரகமணி ஊழல்’ நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Published on: September 21, 2025 at 10:51 pm
திருப்பதி, செப்.21, 2025: ஆந்திராவில் முந்தைய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானங்களில் (TTD) மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த ஊழல் குற்றச்சாட்டை பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அதில், ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்த காலத்தில் கோயிலின் காணிக்கைப் பெட்டிகளில் இருந்து ரூ.100 கோடிக்கும் மேல் திருடப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து, பாஜக தலைவரும், தேவஸ்தான அறக்கட்டளை வாரிய உறுப்பினருமான ஜி.பானுபிரகாஷ் ரெட்டி கூறுகையில், “கோயில் ஊழியர் சி.ரவிக்குமார், சக்திவாய்ந்த அரசியல் பிரமுகர்களின் ஆதரவுடன் நிதியை மோசடி செய்துள்ளார்” என்றார். மேலும், முறைகேடுகளைக் காட்டும் சிசிடிவி காட்சிகளையும் அவர் வெளியிட்டார்.
இதையடுத்து, ரெட்டி நேரடியாக முன்னாள் தேவஸ்தானத் தலைவர் பூமணா கருணாகர் ரெட்டியின் பெயரைக் குறிப்பிட்டு, அப்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அறிவுறுத்தலின் பேரில் “பரகாமணி ஊழல்” நடந்துள்ளது” என்றார்.
இதையும் படிங்க : லாலு மகன் 9ஆம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை.. பிரசாந்த் கிஷோர்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com