‘இன்னும் அதிகமாக செய்ய முடியும்’; பாகிஸ்தானை எச்சரித்த ராஜ்நாத் சிங்!

Rajnath Singh: நாங்கள் இன்னமும் அதிகமாக செய்திருக்கலாம் என பாகிஸ்தானை எச்சரித்துள்ளார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

Published on: May 29, 2025 at 2:28 pm

புதுடெல்லி, மே 29 2025: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (வியாழக்கிழமை) ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பேசினார். அப்போது பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இது குறித்து பேசிய அவர், “இந்தியப் படைகள் அதிக சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. எனினும், அரசாங்கம் உலகிற்கு ஒழுக்கத்தையும் மூலோபாய ஒருங்கிணைப்பையும் வெளிப்படுத்தத் தேர்ந்தெடுத்த நடவடிக்கை எடுத்தது” என்றார்.

தேசிய தலைநகரில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றிய ராஜ்நாத் சிங் இதனை தெரிவித்தார். மேலும், தேசிய பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கை ஆகிய இரட்டை இலக்குகளை வலியுறுத்தினார். தொடர்ந்து, இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலையை அதிகரிப்பதில் மேக் இன் இந்தியா முயற்சியின் பங்கைப் பாராட்டினார். தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், “நாங்கள் முதலில் பயங்கரவாத மறைவிடங்களை அழித்தோம்” என்றார்.

இதையடுத்து அவர் பேசுகையில், “அடுத்து எதிரிகளின் இராணுவ தளங்கள் மற்றும் விமான தளங்களை அழித்தோம். மேலும், அதிகார ஒருங்கிணைப்பு மற்றும் கட்டுப்பாட்டின் சிறந்த உதாரணத்தை உலகிற்கு வழங்கினோம்” என்றார்.

பஹல்காம் தாக்குதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உள்ளூர்வாசி உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தது. இதில் 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவு.. சவுதியிடம் சொல்வேன்; அசாதுதீன் ஓவைசி

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு செக்.. சுதர்சன ரெட்டியை களமிறக்கிய எதிர்க்கட்சிகள்.. தி.மு.க வாக்கு யாருக்கு?
Sudershan Reddy

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு செக்.. சுதர்சன ரெட்டியை களமிறக்கிய எதிர்க்கட்சிகள்.. தி.மு.க வாக்கு யாருக்கு?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com