510 ஜிகாவாட் ஆக உயர்வு.. மின் உற்பத்தித்திறன் இரட்டிப்பு.. மனோகர் லால் கட்டார்

Power Minister Manohar Lal: இந்தியாவின் மின் உற்பத்தி திறன் 2014 முதல் இரட்டிப்பு அளவுக்கு உயர்ந்து, தற்போது 510 ஜிகாவாட் (GW) ஆக உள்ளது என்று மத்திய மின்சாரத் துறை அமைச்சரான மனோஹர் லால் தெரிவித்துள்ளார்.

Published on: January 16, 2026 at 11:35 am

Updated on: January 16, 2026 at 12:15 pm

புதுடெல்லி, ஜன.16, 2026: மத்திய மின்சாரத் துறை அமைச்சரான மனோஹர் லால் புதுடெல்லியில் நடைபெற்ற பாரத் எலக்ட்ரிசிட்டி சம்மிட் 2026 தொடக்க விழாவில் உரையாற்றினார். அப்போது, “ 2014இல் இந்தியாவின் நிறுவப்பட்ட மின் உற்பத்தி திறன் 249 ஜிகாவாட் இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் அது 510 ஜிகாவாட் ஆக இரட்டிப்பு அளவுக்கு உயர்ந்துள்ளது” என்றார்.

தொடர்ந்து அவர், “இந்தியா தற்போது நம்பகத்தன்மை, அணுகல் வசதி மற்றும் நிலைத்தன்மை கொண்ட ஆற்றல் வளத்தின் புதிய காலத்தில் நுழைந்துள்ளது. அந்த வகையில், இந்தியாவை பொறுத்தமட்டில் உலகின் மூன்றாவது பெரிய மின் உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் நாடாக உள்ளது” என்றார்.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்.. யார் முன்னிலை?

மேலும், சுத்தமான ஆற்றல் முன்னேற்றத்தை வலியுறுத்திய அவர், 2014இல் 32 சதவீதமாக இருந்த ஆற்றல் திறன், 2025இல் 52 சதவீதமாக உயர்ந்துள்ளதாகக் கூறினார். இதன் மூலம், இந்தியா உலகளாவிய ஆற்றல் மாற்றத்தில் முன்னணி நாடுகளின் வரிசையில் இணைந்துள்ளது. பாரத் எலக்ட்ரிசிட்டி சம்மிட் 2026 மாநாடு மார்ச் 19 முதல் 22 வரை புதிய தில்லி யஷோபூமியில் நடைபெற உள்ளது.

நான்கு நாள் நீடிக்கும் இந்த உலகளாவிய மாநாடு, கொள்கை நிர்ணயர்கள், தொழில் தலைவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் நிபுணர்களை ஒன்றிணைத்து, மின் துறையின் முழு மதிப்புச் சங்கிலியைப் பற்றி விவாதிக்கவுள்ளது. இந்த மாநாடு, இந்தியாவின் உள்ளூர் வலிமைகளை உலகளாவிய பார்வையுடன் இணைத்து, நிலையான மின் எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்துடன் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர் மாநாடு.. இதன் நோக்கம், கருப்பொருள் என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com