Amit Shah | அந்தமான் தீவுகளின் தலைநகர் ஸ்ரீ விஜய புரம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Amit Shah | அந்தமான் தீவுகளின் தலைநகர் ஸ்ரீ விஜய புரம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
Published on: September 13, 2024 at 11:22 pm
Amit Shah | அந்தமான் தீவுகளின் தலைநகர் போர்ட் ப்ளேயர் பெயர் ஸ்ரீ விஜய புரம் என மாற்றப்பட்டுள்ளது. இதனை உள்துறை அமைச்சர் அமித் ஷா, ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். போர்ட் பிளேர் நகரம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் நுழைவு நகரம் ஆகும். இது, லெப்டினன்ட் ஆர்க்கிபால்ட் பிளேயர் பெயரிடப்பட்டது. அந்தமான் தீவுகளை முழுமையாக ஆய்வு செய்த முதல் அதிகாரி பிளேயர் ஆவார்.
1771 ஆம் ஆண்டில் பாம்பே மரைனில் சேர்ந்த பிறகு, பிளேயர் அடுத்த ஆண்டு இந்தியா, ஈரான் மற்றும் அரேபியாவின் கடற்கரைகளில் ஆய்வுப் பணியைத் தொடங்கினார். 11 ஆம் நூற்றாண்டின் சோழப் பேரரசர் முதலாம் ராஜேந்திரனால் இன்றைய இந்தோனேசியாவில் உள்ள ஸ்ரீவிஜயா மீது தாக்குதல் நடத்த இந்த இடத்தை கப்பற்படை தளமாக பயன்படுத்தியதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.அந்தமான் போர்ட் ப்ளேயர் தீவில்தான் புகழ்பெற்ற சிறைச்சாலையான காலாபாணி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஹரியானா தேர்தலில் நாட்டின் பணக்கார பெண்மணி; யார் இந்த சாவித்திரி ஜிண்டால்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com