Narendra Modi: “காங்கிரஸிடம் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை; கட்சி மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர்” என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
Narendra Modi: “காங்கிரஸிடம் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை; கட்சி மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர்” என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Published on: January 18, 2026 at 8:10 pm
கௌஹாத்தி ஜனவரி 18, 2026;பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை, அஸ்ஸாம் மாநிலம் நாகோனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் தொடர்ந்து காங்கிரஸின் “எதிர்மறை அரசியல்” மற்றும் வளர்ச்சி திட்டமின்மையை நிராகரித்து வருகிறார்கள்.
மேலும், காங்கிரஸ், மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது” எனவும் கூறினார். மேலும் பாரதிய ஜனதா அரசின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, “இந்த தேர்தல்கள் மற்றொரு செய்தியை வெளிப்படுத்துகின்றன. நாடு தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் எதிர்மறை அரசியலை நிராகரித்து வருகிறது. காங்கிரஸ் உருவான மும்பை நகரிலேயே, இன்று அது நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் உள்ள கட்சியாக மாறியுள்ளது. பல ஆண்டுகள் ஆட்சி செய்த மகாராஷ்டிராவில், காங்கிரஸ் முற்றிலும் சுருங்கி விட்டது. வளர்ச்சிக்கான எந்தத் திட்டமும் இல்லாததால், காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது” என்றார்.
இதையும் படிங்க லக்னோவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட இன்டிகோ விமானம்.. வெடிகுண்டு மிரட்டல் காரணமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com