சிந்து நதி நீரை தடுக்க இந்தியா சதி: பாகிஸ்தான் பிரதமர் அலறல்!

Pahalgam attack: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக, “நடுநிலையான விசாரணைக்கு தயார்” என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். மேலும், பயங்கரவாதத்தை சாக்காக வைத்து இந்தியா சிந்து நதி நீரை தடுக்கிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Published on: April 26, 2025 at 1:21 pm

Updated on: April 26, 2025 at 7:13 pm

இஸ்லாமாபாத், ஏப்.26 2025: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ‘நடுநிலை விசாரணைக்கு’ பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் அபோதாபாத்தில் உள்ள ஒரு இராணுவ அகாடமியில் நடந்த விழாவில் பேசிய அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “எந்தவொரு நடுநிலையான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணையிலும் பங்கேற்க பாகிஸ்தான் தயாராக உள்ளது” என்றார். எனினும், பாகிஸ்தானின் படைகள் நாட்டின் இறையாண்மையையும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க முழு திறனையும் வெளிப்படுத்தும்” என்றார்.

இதற்கிடையில், இந்தியாவின் அட்டாரி நில எல்லை வழியாக நாட்டிற்குள் அதிகாரப்பூர்வமாக நுழைந்த அனைத்து பாகிஸ்தானியர்களும் மே 1 ஆம் தேதிக்குள் வெளியேறுமாறு இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர், “உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதற்கு இந்தியா பயங்கரவாத தாக்குதலை ஒரு சாக்காகப் பயன்படுத்தியது” என்றார்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: இந்திய ராணுவம் பதிலடி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com