பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்.. பி.ஆர். பாண்டியன் பங்கேற்பு.. பிப்.14 பேச்சுவார்த்தை!

பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டத்தில் பி.ஆர் பாண்டியன் கலந்துகொண்டார்.

Published on: February 12, 2025 at 6:17 pm

பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டத்தில் பி.ஆர் பாண்டியன் கலந்துகொண்டார். இது குறித்து, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு செய்தித் தொடர்பாளர் என். மணிமாறன் செய்தி அறிக்கை ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், பஞ்சாப் மாநிலம் கணூரி பார்டரில் சம்யுக்த்த கிசான் மோர்ச்சா அரசியல் சார்பற்ற அமைப்பின் சார்பில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் மத்திய அரசு கொண்டு வர வலியுறுத்தி போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

இந்தக் கனூரிபார்டரில் போராட்டம் துவங்கி இன்றோடு ஓராண்டை நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு மாபெரும் விவசாயிகள் பேரணி கனூரிபார்டரில் நடைபெற்றது.
இந்தப் பேரணியில் தமிழ்நாட்டில் இருந்து எஸ்.கே.எம் தமிழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான பி ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்களுடன் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் அபிமன்யு கொஹார், கர்நாடக சாந்தகுமார் உள்ளிட்டோர் உடன் உள்ளனர். திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தில்குமார், மன்னார்குடி ஒன்றிய தலைவர் பைங்கை குமார், வலங்கைமான் ஒன்றிய நிர்வாகிகள் அய்யாரு, பிரபாகரன், சக்திவேல்,குடவாசல் நகர செயலாளர் சரவணபாபு, அய்யாபிள்ளை, புவனேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவது குறித்தான பேச்சுவார்த்தைக்கு நடத்திட வருமாறு ஜக்ஜித் சிங் டல்லேவால் உட்பட நிர்வாகிகளுக்கு 14ஆம் தேதி சண்டிகர் நகரத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தக கூட்டத்தில் தமிழகம் சார்பில் பி ஆர் பாண்டியன் பங்கேற்க உள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க பசு கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு.. உத்தரப் பிரதேச போலீஸ் அதிரடி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com