மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு; பிரக்யா சிங் தாகூர் விடுதலை

Malegaon blast case: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாகூர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Published on: July 31, 2025 at 1:27 pm

மும்பை, ஜூலை 31 2025: மகாராஷ்டிரா மாநிலத்தின் வகுப்புவாத உணர்வு மிக்க மாலேகான் நகரத்தை உலுக்கிய சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு, தீர்ப்பு வெளியாகியுள்ளது. மாலேகான் குண்டுவெடிப்பு 2018ஆம் ஆண்டு நடந்தது.
இந்த வழக்கில் பாஜகவின் முன்னாள் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் உட்பட 7 பேர் குற்றவாளிகள் என சேர்க்கப்பட்டனர்.

நீதிமன்றம் விடுவிப்பு

இந்த நிலையில்,7 குற்றவாளிகளையும் மும்பையில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூலை 31) நிரபராதிகள் என விடுவித்தது. இந்த வழக்கில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்காக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாகூர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

அக்காலக்கட்டத்தில், இந்த வழக்கின் விசாரணையை நடத்திய தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, குற்றத்தின் அளவுக்கேற்ற தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக் கோரி இருந்தது.

மாலேகான் குண்டுவெடிப்பு

புனித ரம்ஜான் மாதத்தில், நவராத்திரி பண்டிகைக்கு சற்று முன்பு இந்த குண்டுவெடிப்பு நடந்தது. முஸ்லிம் சமூகத்தின் ஒரு பிரிவினரிடையே பயங்கரவாதத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என என்.ஐ.ஏ சந்தேகித்தது.
இந்த வழக்கு முதலில் மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) விசாரித்து, பின்னர் 2011 இல் தேசிய புலனாய்வுக்கு மாற்றப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேர் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்த பின்னர், வழக்கின் விசாரணை 2018 இல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பாலியல் வன்கொடுமை, பணம் பறிப்பு.. கேரள ராப் பாடகர் வேடன் மீது வழக்குப்பதிவு

தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்காக சிறப்பு சட்டம்.. மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்
Dr. Ramadoss

தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்காக சிறப்பு சட்டம்.. மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com