350 கிலோ ஆர்.டி.எக்ஸ்? ஜம்மு டூ ஹரியானா.. இரு மருத்துவர்கள் கைது!

Kashmir: ஜம்மு காஷ்மீரில் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: November 10, 2025 at 12:34 pm

ஜம்மு, நவ.10, 2025: ஆயுத வழக்கில் கைது செய்யப்பட்ட காஷ்மீர் மருத்துவர் ஒருவர் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து, வெடிபொருட்கள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு மூலப்பொருளான 350 கிலோகிராம் அம்மோனியம் நைட்ரேட்டை ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

மேலும், ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் இருந்து ஒரு துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணையின் போது டாக்டர் அதீல் அகமது ராதர் அளித்த தகவலின் அடிப்படையில், ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா மருத்துவமனையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக மருத்துவமனையில் பணியாற்றிய மற்றொரு மருத்துவர் டாக்டர் முசாமில் ஷகீலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : ‘உனக்கு வீட்டில் அம்மா, சகோதரி இல்லையா’? ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு டார்ச்சர்.. அதிர்ச்சி வீடியோ!

மேலும், ஃபரிதாபாத்தில் சுமார் 300 கிலோகிராம் ஆர்.டி.எக்ஸ் மற்றும் ஒரு ஏ.கே.-47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. இருப்பினும், மீட்கப்பட்ட பொருள் ஆர்.டி.எக்ஸ் அல்ல, ஒரு ரசாயனப் பொருள் என்றும், அந்த துப்பாக்கி ஏ.கே.-47 அல்ல என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முசம்மில் ஷகீல் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோயில் என்ற பகுதியை சேர்ந்தவர் ஆவார். இந்த இரு மருத்துவர்களும் ஜம்மு காஷ்மீருக்கு வரவழைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஆயுதச் சட்டத்தின் பிரிவுகள் 7/25 மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) பிரிவுகள் 13, 28, 38 மற்றும் 39 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் அழைப்பு.. ஆனால் ஓர் நிபந்தனை.. மோகன் பகவத்!

ஜம்மு காஷ்மீரை, முழுமையாக இணைக்க பட்டேல் விரும்பினார்; ஆனால் நேரு… பிரதமர் நரேந்திர மோடி பரபரப்பு பேச்சு
Narendra Modi

ஜம்மு காஷ்மீரை, முழுமையாக இணைக்க பட்டேல் விரும்பினார்; ஆனால் நேரு… பிரதமர் நரேந்திர

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com