bomb like object exploded in west bengal: மேற்கு வங்கத்தில் மர்ம பொருள் வெடித்து சிதறியதில் 5 குழந்தைகள் காயமுற்றனர் என பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
bomb like object exploded in west bengal: மேற்கு வங்கத்தில் மர்ம பொருள் வெடித்து சிதறியதில் 5 குழந்தைகள் காயமுற்றனர் என பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
Published on: April 17, 2025 at 10:08 pm
கொல்கத்தா, ஏப்.17 2025: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா மாவட்டத்தில் உள்ள கலியாசக் என்ற இடத்தில் வியாழக்கிழமை (ஏப்.17 2025) மர்ம பொருள் ஒன்று வெடித்து சிறதியது. இதற்கிடையில், குண்டு போன்ற பொருள் வெடித்ததில் ஐந்து குழந்தைகள் காயமடைந்ததாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என்று பி.டி.ஐ தெரிவித்துள்ளது.
இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், கலியாசக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திர்காநகர் பகுதியில் உள்ள ஒரு கைவிடப்பட்ட கட்டிடத்தில் இந்த வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் வெடித்துள்ளது.
இதில், எட்டு முதல் 12 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகள் காயமுற்றனர். இவர்கள் அந்தப் பகுதியில், விளையாடிக் கொண்டிருந்தபோது தரையில் கிடந்த பொருளைக் கண்டதாக அதிகாரி கூறினார்.
அவர்களில் ஒருவர் அதை உதைத்துள்ளார். இந்த நிலையில், அந்த பொருள் வெடித்து சிதறியுள்ளது. இதில், ஐந்து குழந்தைகள் காயமடைந்தனர். அவர்களில் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க : வக்ஃப் திருத்தச் சட்டம்; ‘நீங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்’.. மோடியை தாக்கிய மம்தா பானர்ஜி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com