பிப்.28ஆம் தேதி 3 கப்பல்களுக்கு அனுமதி கோரிய ஈரான்.. ஜெய்சங்கர் தகவல்

Jaishankar: பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மூன்று கப்பல்களுக்கு துறைமுக அனுமதி கோரியது; அதை நாம் மார்ச் 1ஆம் தேதி வழங்கினோம் என்று வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Published on: March 9, 2026 at 3:22 pm

புதுடெல்லி, மார்ச் 9, 2026: பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மூன்று கப்பல்களுக்கு துறைமுக அனுமதி கோரியது; அதை நாம் மார்ச் 1ஆம் தேதி வழங்கினோம் என்று வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் தேசிய நலன், ஆற்றல் பாதுகாப்பு, மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பே மிக முக்கியமானவை எனவும் அவர் கூறினார்.

இந்தியா, ஈரான்–அமெரிக்கா போருக்கு முற்றுப்புள்ளி வைக்க உரையாடலும் தூதரக முயற்சிகளும் அவசியம் என மீண்டும் ஜெய்சங்கர் வலியுறுத்தினார். மேலும், வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பதற்றத்தை குறைத்து, கட்டுப்பாட்டுடன் நடக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, மேற்கு ஆசியாவில் வாழும் ஒரு கோடி இந்தியர்களின் பாதுகாப்பும், ஆற்றல் பாதுகாப்பும், தடையற்ற வர்த்தகப் போக்குவரத்தும் அரசாங்கத்தின் முக்கிய கவனமாக உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

மாநிலங்களவையில் ஜெய்சங்கர் பேச்சு

மேற்கு ஆசியா நிலைமை குறித்து ராஜ்யசபாவில் உரையாற்றிய வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய போர் மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது என்று குறிப்பிட்டார். குறிப்பாக, மோதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து, பாதுகாப்பு நிலைமை பெரிதும் மோசமடைந்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மூன்று கப்பல்களுக்கு துறைமுக அனுமதி கோரியது; அதை நாம் மார்ச் 1ஆம் தேதி வழங்கினோம் என்றும் வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மாவட்டந்தோறும் புதிய மருத்துவ கல்லூரிகள்.. சுகாதார துறையில் நாடு வளர்ச்சி.. பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் திட்டமிட்டு அவமதிப்பு.. காட்டாட்சிக்கு முடிவு கட்டும் நேரம்.. பாஜக! C R Kesavan

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் திட்டமிட்டு அவமதிப்பு.. காட்டாட்சிக்கு முடிவு கட்டும் நேரம்..

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com