வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்க: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்!

Waqf Act case: வக்ஃப் திருத்தச் சட்டத்தை சவால் செய்யும் மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

Published on: April 25, 2025 at 4:07 pm

புதுடெல்லி, ஏப்.25 2025: வக்ஃபு திருத்தம் சட்டம் 2025-இன் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரி மத்திய அரசு வெள்ளிக்கிழமை (ஏப்.25 2025) உச்ச நீதிமன்றத்தில் முதற்கட்ட பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது.

இந்தப் பிரமாணப் பத்திரத்தில், சட்டத்தின் எந்தவொரு விதிகளுக்கும் தடை விதிக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த பிரமாண பத்திரத்தில், சட்டத்தின் எந்தவொரு விதிகளுக்கும் தடை விதிக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும், அரசியலமைப்பு நீதிமன்றங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு சட்டப்பூர்வ விதியை நிறுத்தி வைக்காது என்பது சட்டத்தில் ஒரு தீர்க்கமான நிலைப்பாடு என்றும் மத்திய அரசு கூறியுள்ளது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், “பிரிவு 3(1)(r)-ன் கீழ் பயனர் மூலம் வக்ஃப் ஆகப் பாதுகாக்கப்படுவதற்கு, திருத்தத்திலோ அல்லது அதற்கு முன்னரோ எந்த அறக்கட்டளை, பத்திரம் அல்லது எந்த ஆவண ஆதாரமும் வலியுறுத்தப்படவில்லை” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 100 ஆண்டுகளாக வக்ஃப்களை நிர்வகிக்கும் சட்டத்தின்படி பதிவு எப்போதும் கட்டாயமாக உள்ளது என்று அது கூறியது.

முன்னதாக, ஏப்.17ஆம் தேதி பயனரால் வக்ஃப்” உட்பட வக்ஃப் சொத்துக்களை மே 5 வரை ரத்து செய்ய மாட்டோம் என்றும், மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் வாரியங்களுக்கு எந்த நியமனங்களையும் செய்ய மாட்டோம் என்றும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Pahalgam terror attack: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் இல்லங்கள் IED கொண்டு தகர்ப்பு..!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com