Transgender woman case: தனியார் மருத்துவமனை தனது கருமுட்டைகளைப் பாதுகாக்க மறுத்ததை அடுத்து, திருநம்பி ஒருவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Transgender woman case: தனியார் மருத்துவமனை தனது கருமுட்டைகளைப் பாதுகாக்க மறுத்ததை அடுத்து, திருநம்பி ஒருவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Published on: February 12, 2025 at 9:57 am
கேரளத்தில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனை தனது பாலின அடையாளத்தைக் காரணம் காட்டி தனது கருமுட்டைகளை உறைய வைத்து சேமிக்கும் உரிமையை மறுத்தது என திருநம்பி ஒருவர் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில், மனுதாரர் 28 வயதான திருநம்பி ஆவார். அவர் பிறக்கும்போது பெண் பாலினமாக இருந்துள்ளார். ஆனால் தற்போது தன்னை ஒரு ஆணாக அடையாளப்படுத்துகிறார்.
பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையை இன்னும் முடிக்கவில்லை என்றாலும், மார்பகத்தை அகற்றும் அறுவை சிகிச்சையை அவர் மேற்கொண்டுவிட்டார்.
இதற்கிடையில், தனது மனுவில், தனது கருமுட்டைகளை பாதுகாப்பது எதிர்காலத்தில் தனது இனப்பெருக்கத் தேவையை பாதுகாக்க முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில், நீதிபதி சி.எஸ். டயஸ், கிம்ஸ் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பி அதன் பதிலைக் கோரியுள்ளார்.
இந்த வழக்கில் திருநம்பி, ஆண்கள் உயிரியல் ரீதியாக கருத்தரிக்கும் திறன் கொண்டவர்கள் என்றும், முட்டை கிரையோபிரசர்வேஷனை அணுக மறுப்பது அவர்களின் இனப்பெருக்க சுயாட்சியை திறம்பட பறிக்கிறது என்றும் வாதிட்டார்.
இதையும் படிங்க : கொச்சியில் 4 பெண் மாடல்களுடன் நடிகர்.. நீதிபதி பரபரப்பு தீர்ப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com