Pahalgam terror attack: பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்ட பிரபல யூ-ட்யூபர் ஜோதி மல்கோத்ரா முதல் தேவேந்தர் சிங் வரை 11 பேர், கடந்த 3 நாள்களில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
Pahalgam terror attack: பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்ட பிரபல யூ-ட்யூபர் ஜோதி மல்கோத்ரா முதல் தேவேந்தர் சிங் வரை 11 பேர், கடந்த 3 நாள்களில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
Published on: May 19, 2025 at 9:01 pm
புதுடெல்லி, மே 19 2025: பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்ட 11 பேர் இதுவரை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 3 நாள்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்த ஜோதி மல்கோத்ரா முதன்மையானவர் ஆவார்.
இவர் டிராவல் யூ-ட்யூபர் ஆக செயல்பட்டு வந்தார். இவரின் கைது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவரை சமூக வலைதளத்தில் பலரும் பின்தொடர்கின்றனர்.
யாமீன் முஹம்மது
ஜோதி மல்கோத்ராவை தொடர்ந்து 32 வயது கசாலா என்ற பெண்ணையும் மற்றும் பஞ்சாபின் மலேர்கோட்லாவைச் சேர்ந்த யாமீன் முகமது ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இந்திய இரகசியங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்துள்ளனர். இதற்காக இடைத்தரகர்களிடம் இருந்து பணத்தை பெற்றுள்ளனர். இதில் தேவேந்தர் சிங் 25 வயதான நிலையில் கல்லூரி படித்து வருகிறார்.
இவர் மீதும் மிகத் தீவிரமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவர் பஞ்சாப்பில் உள்ள கால்சா கல்லூரியில் பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்து வருகிறார். இவர்களின் கைது மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் அர்மன், தாரீஃப், நவுமன் இல்லாஹி, முகம்மது முர்தாஸா அலி, ஷேக் தாத், சுக்ஃப்ரீத் சிங், கரண் பீர் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்ட மற்ற நபர்கள் ஆவார்கள்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் பயங்கரவாதிகளை நொறுக்கிய இந்திய ராணுவம்.. சிந்தூர் யாத்திரை சென்ற பெண்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com