கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவரா நீங்கள்..? அடிக்கடி கண் சிமிட்டுங்க..!

How to prevent eye strain: கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் நபர்கள் அடிக்கடி கண்களை சிமிட்டி கொள்ள வேண்டும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் கண் எரிச்சல் பாதிப்பில் இருந்து நீங்கள் விடுபட முடியும்

Published on: May 4, 2025 at 5:57 pm

சென்னை மே 4 2025: இன்றைய காலகட்டத்தில் அலுவலகம் முதல் வீடுகளில் கூட கம்ப்யூட்டர்கள் பணிக்காக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இன்றைய இளசுகள், புத்தகப் பைகள் போன்று மடிக்கணினி பேக்குகளை முதுகில் சுமந்து செல்வதையும் நாம் பார்க்க முடியும்.

இந்த காட்சி ரயில்கள் முதல் பேருந்துகள் வரை மிக மிக சாதாரணம். மேலும் இன்றைய தலைமுறையை பொறுத்தவரை சிறிய வயது குழந்தைகளிலும் கூட ஸ்மார்ட் போன்கள் நடமாடுகின்றன. இது அவர்களின் கண் மற்றும் முகத்தில் பாதிப்புகளை கொடுக்கிறது என பல்வேறு ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன.

இந்த நிலையில், கம்ப்யூட்டர் பார்ப்பதனால் கண் எரிச்சல் ஏற்படுவதை தவிர்க்கும் விதத்தில் அடிக்கடி, “கண்களை சிமிட்டு கொள்ள வேண்டும்” என்கிறது புதிய ஆய்வு. இதனால் கண் எரிச்சல் நீங்குவதோடு நமது கண்களுக்கும் புதுவித சக்தி கிடைக்கிறது. கம்ப்யூட்டரில் பணி செய்யும் நபர்கள் இதனை மனதில் வைத்து செயல்பட வேண்டும். இந்த நிலையில் அடிக்கடி கண் சிமிட்டி கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து நாம் பார்க்கலாம்.

கண் சிமிட்டுவதால் ஏற்படும் நன்மைகள்

கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் நபர் ஒருவர் கண்களை சிமிட்டி கொள்வதன் மூலம் வறண்ட கண்களை தவிர்க்க முடியும். அதாவது கண்களில் ஏற்படும் வறட்சி இதன் மூலம் நீங்கும். இதை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டு சொல்வதில் ஒரு நோக்கம் உள்ளது.

அதாவது ஸ்மார்ட் போனில் அல்லது கம்ப்யூட்டரிலோ மூழ்கிக் கிடக்கும் நபர்களால் தங்களது கண்களை எளிதாக சிமிட்ட முடியாது. அவர்கள் கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட் போனில் தோன்றும் காட்சிகளை பார்த்து அப்படியே கண்ணிமைக்காமல் இருப்பார்கள்.

இந்த புதிய ஆய்வு அவ்வாறு இருக்கக் கூடாது என்றும் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறையாவது நமது கண்களுக்கு சிறிதளவு ஓய்வு அளிக்க வேண்டும் என கூறுகிறது. அந்த வகையில், கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் போது அடிக்கடி நமது கண்களை சிமிட்டு கொள்வது நலம் பயக்கும்; மேலும் கண் எரிச்சலையும் நீக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காதலின் சின்னம் தாஜ்மஹால் இன்று கட்டப்பட்டால்.. எவ்வளவு செலவாகும்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com