‘இந்தத் துவையல தொட்டுக்கோங்க… வாந்தி குமட்டல் வராது’ : டாக்டர் சிவராமன்

Lifestyle | வாந்தி, குமட்டலை போக்கும் அருமருந்து இஞ்சி. இது பற்றி மருத்துவர் சிவராமன் கூறியதை பார்க்கலாம்.

Published on: September 19, 2024 at 3:11 pm

Updated on: September 19, 2024 at 3:39 pm

Lifestyle | வாந்தி வரும் தன்மையை குறைப்பதற்கு இஞ்சி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபனை செய்யப்பட்டுள்ளது. வாந்தி என்பது மனித மூளையில் இருந்து வரக்கூடிய ஒரு செயல் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத ஏதேனும் ஒரு உணவினை சாப்பிட்டாலோ அல்லது அஜீரணம் ஏற்பட்டாலோ பொதுவாக வாந்தி ஏற்படும். மேலும் சிலருக்கு பயணத்தின் போது அதாவது பஸ், கார், கப்பல் மற்றும் விமானம் போன்ற பயணங்களில் ஈடுபடும்போது வாந்தி ஏற்படுகிறது.

இந்த செயலுக்கு மோஷன் சிக்னஸ் என்று பெயர். பயணங்களில் போது வாந்தி வரும் நபர்களுக்கு இஞ்சி ஒரு மகத்துவமான மருந்தாக அமைந்துள்ளது. பயணத்தின் போது மூளையில் இருந்து வசோபிரசின் சுரந்து அதன் மூலமாக வாந்தி ஏற்படுகிறது. அதை கட்டுப்படுத்துவதற்கும் சீராக்குவதற்கும் இஞ்சி பயன்படுகிறது. இஞ்சி பக்க விளைவு ஏதும் இல்லாமல் வாந்தியை கட்டுப்படுத்துகிறது.

இதை நியூ யார்க் அகாடமி ஆப் சயின்ஸ் எனும் மிகப்பெரிய அறிவியல் நிறுவனம் ஆராய்ந்து நிருபனை செய்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் பெரும்பாலானோருக்கு வாந்தி எடுக்கும் உணர்வு ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் ஊட்டச்சத்தான உணவு வகைகளை மற்றும் ஜூஸ் போன்றவை உண்ண வேண்டும் என்று விரும்பினாலும் இந்த வாந்தி எடுக்கும் உணர்வு சத்தான உணவுப் பொருள்களை உட்கொள்ள மனமில்லாமல் செய்கிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு எஸ்சிஜி ஹார்மோன் உடலில் சுரக்கும் பொழுது வாந்தி ஏற்படுகிறது. இந்த நிலையில் விரும்பி உணவுகளை உண்ண வேண்டும் என்று இருந்தாலும் வாந்தியின் காரணமாக உண்ண முடியாமல் போகின்றது. கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருக்கும் சிசுவுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் வாந்தியை கட்டுப்படுத்தி நல்ல உணவு வகைகளை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்வதற்கு இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது.

இஞ்சியை சாராக எடுக்காமல், ஒரு சிறிய துண்டு எடுத்து துவையல் செய்து உணவில் சேர்த்து பசியாறும் பொழுது கர்ப்ப காலத்தில் ஆரம்ப காலத்தில் ஏற்படக்கூடிய வாந்தியை தடுக்கிறது. வாந்தி மிக அதிக அளவில் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு கூட இந்த இஞ்சி பயனுள்ளதாக அமைகிறது என்று நிருபனை செய்யப்பட்டுள்ளது. என்று டாக்டர் சிவராமன் யூடியுப் பதிவில் தெரிவித்துள்ளார்.

Disclaimer: (பொதுவாக கர்ப்பிணிகள் உணவில் அதிகளவு இஞ்சி எடுத்துக் கொள்ள கூடாது என்ற நம்பிக்கை தொடர்கிறது. ஆகவே, இது தொடர்பாக கர்ப்பிணிகள் மருத்துவரை அணுகி, அவர்கள் கொடுக்கும் அறிவுரையை ஏற்றுக் கொள்வது நல்லது.)

இதையும் படிங்க : பெண்களை பாதிக்கும் சிறுநீர் கசிவு பிரச்னை: தீர்வு என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com