1 கிலோ மீன் வாங்கினா போதும்.. இந்தக் குழம்பின் ருசியே தனிதான்!

Food: எந்த மீன் வாங்கினாலும் மீன் குழம்பு இப்படி செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்.

Published on: March 17, 2025 at 12:45 pm

மீன் குழம்புக்கு எப்பொழுதுமே ஏராளமான ரசிகர்கள் உண்டு. மீன் குழம்பை மறுநாள் வைத்து சாப்பிடும் பொழுது அதன் சுவை தனிதான். இப்போது காரசாரமான சுவையான மீன் குழம்பு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

மீன் -1 கிலோ
புளி -2 பெரிய நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் -3 டேபிள் ஸ்பூன்
கடுகு -1 டீஸ்பூன்
வெந்தயம் -½ டீஸ்பூன்
கருவேப்பிலை -1 கொத்து
சின்ன வெங்காயம் -¾ கப்
பச்சை மிளகாய் -2
தக்காளி -1கப்
காஷ்மீரி மிளகாய் தூள் -2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா -½ டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் -3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் -¼ டீஸ்பூன் டீஸ்பூன்
தண்ணீர் -1கப்
உப்பு – தேவையான அளவு

அரைக்க வேண்டியவை

எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் -1 கப்
பூண்டு -1 கைப்பிடி அளவு
கருவேப்பிலை -1 கொத்து
சீரகம் -1 டீஸ்பூன்
மிளகு -½ டீஸ்பூன்

செய்முறை

முதலில் மீனில் உள்ள செதில்களை நீக்கி மீனை இரண்டு மூன்று முறை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு பெரிய நெல்லிக்காய் அளவு புளியினை ஊற வைத்து புளிக்கரைசல் தயாரித்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து ஒரு கப் சின்ன வெங்காயம், ஒரு கைப்பிடி அளவு பூண்டு, ஒரு கொத்து கருவேப்பிலை, சீரகம், மிளகு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயத்திற்கு பதிலாக பெரிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு வெந்தயம் கருவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். வெங்காயம் வேகமாக வதங்க சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்திற்கு பதிலாக பெரிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். சின்ன வெங்காயம் சேர்த்தால் ருசி கூடுதலாக இருக்கும்.

இதையும் படிங்க : சுவை நாவிலேயே நிற்கும் ; எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ; இப்படி செஞ்சு அசத்துங்க!

இதனுடன் இரண்டு பச்சை மிளகாய் நீளவாக்கில் கீரி சேர்க்கவும். பின்னர் இதனுடன் ஒரு கப் பழுத்த தக்காளி சேர்த்துக் கொள்ளவும். தக்காளி நன்கு வெந்து மசிந்த பின்னர் அடுப்பு தீயை லோ பிளேமில் வைத்து இதனுடன் காஷ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும். பின்னர் இதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்த விழுதினை சேர்த்து வதக்கவும்.

பின்னர் கரைத்து வைத்த புளிக்கரைசல், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குழம்பினை மூடி வைத்து கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்து வெந்த பின்னர் இதனுடன் மீனை ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக சேர்க்கவும். மீன் சேர்த்த பின்னர் கரண்டியை வைத்து மெதுவாக கலந்து விடவும். வேகமாக கிளறினால் மீன் உடைந்து விடும். குழம்பில் எண்ணெய் பிரிந்து மீன் வெந்ததும் அடுப்பை ஆப் செய்யவும். இப்போது சுவையான காரசாரமான மீன் குழம்பு தயார். இதை சுடு சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

இதையும் படிங்க  சட்டுனு செய்யக்கூடிய மோர்க்குழம்பு; இப்படி ட்ரை பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com