Tamil Nadu | பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சிக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
Tamil Nadu | பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சிக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
Published on: September 5, 2024 at 12:21 pm
Tamil Nadu | தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நடைபெறும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் செப். 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஆகிய 3 நாட்கள் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி நடக்கிறது.
இந்தப் பயிற்சியானது காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. இப்பயிற்சியில் பாம்பேபன், இனிப்பு ரொட்டி, கிரீம் பன், பழ ரஸ்க், ஹைதராபாத் கராச்சி பிஸ்கட், ஜெர்ரா உப்பு பிஸ்கட், இனிப்பு குக்கீகள் உள்ளிட்டவை செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மேலும், இந்தப் பயிற்சி ஈக்காட்டுத்தாங்கலில் நடக்கிறது. கூடுதல் தகவல்களை www.editn.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
இதையும்ப படிங்க : பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியில் பணி: செப்.15 கடைசி: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com