TNPSC | குரூப் 4 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்படலாம் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
TNPSC | குரூப் 4 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்படலாம் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Published on: September 19, 2024 at 11:47 pm
TNPSC | தமிழ்நாடு தேர்வாணையம் குரூப் 4 தேர்வுகளை நடத்தியுள்ளது. இதற்கான தேர்வு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற்றது. முதலில் 6244 பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் கூடுதலாக 480 பணியிடங்கள் பின்னர் சேர்க்கப்பட்டன. இதனால் பணியிடங்களின் எண்ணிக்கை 624 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் பணியிடங்களை மேலும் அதிகரிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். தங்களின் கோரிக்கையை மாணவர்களும் அரசுக்கு தெரிவித்தனர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “குரூப் 4 பணியிடங்கள் 20 ஆயிரம் வரை காலியாக உள்ளன; இந்த விவகாரத்தில் தமிழக அரசு கவனம் செலுத்தி பணியிடங்களை உயர்த்த வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில் குரூப்-4 பணியிடங்கள் மேலும் அதிகரிக்கப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புதிய தகவலின் படி அக்டோபர் இரண்டாவது வாரத்தில் முறையான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இந்தியா போஸ்ட் ஜி.டி.எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: ஆன்லைனில் எப்படி பார்ப்பது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com