Swarnamalya | ஆபாசமான படமொன்றில் ஏமாற்றி நடிக்க வைக்கப்பட்டதாக நடிகை ஸ்வர்ணமால்யா கூறியுள்ளார்.
Swarnamalya | ஆபாசமான படமொன்றில் ஏமாற்றி நடிக்க வைக்கப்பட்டதாக நடிகை ஸ்வர்ணமால்யா கூறியுள்ளார்.
Published on: September 4, 2024 at 10:39 pm
Updated on: September 4, 2024 at 10:40 pm
Swarnamalya | ஆபாச படம் ஒன்றில் தாம் ஏமாற்றி நடிக்க வைக்கபட்டது குறித்தும், திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது குறித்தும் நடிகை ஸ்வர்ணமால்யா வலையொளிக்கு அளித்த பேட்டியொன்றில் நினைவுகூர்ந்துள்ளார்.
சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகமாகி, பின்னர் சினிமாவில் தன் கேரியரை தொடங்கியவர் நடிகை ஸ்வர்ணமால்யா. மணிரத்தினத்தின் அலைபாயுதே படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்திருப்பார்.
தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்து இருந்தார். இந்த நிலையில், பெற்றோர் பார்த்த வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்துக்கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
இதையும் படிங்க : செனோரீட்டா ஐ லவ் யூ: நடிகை ஆண்ட்ரியாவுக்கு பிடித்த பெயர் தெரியுமா?
ஆனால் இந்தத் திருமண வாழ்க்கை சரியாக 2 ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. விவாகரத்தில் முடிந்தது. தொடர்ந்து படங்களில் நடித்தார் ஸ்வர்ணமால்யா.
அப்போது அவரை ஏமாற்றி ஆபாசமான படம் ஒன்றில் நடிக்க வைத்துள்ளனர். இதைப் பற்றி அறியாமல் ஸ்வர்ணமால்யா ஒப்புக்கொண்டுள்ளார்.
இது பற்றி பேசிய ஸ்வர்ணமால்யா அனைவரும் இயக்குனர் மணிரத்தினம் போல் ஜென்டில்மேன் ஆக இருப்பார்கள் என நினைத்தேன்” எனக் கூறியுள்ளார். மேலும், அந்தப் படத்தின் சி.டி.யை தன்னிடம் கொடுத்தார்கள் என்றும் அதைக் கூட நான் பார்க்கவில்லை” என்றும் கூறியுள்ளார்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com