இந்தி திரையுலகில் மோசமாக.. மனம் திறந்த நடிகை ரெஜீனா!

Regina Cassandra: நடிகை ரெஜீனா கசாண்ட்ரா பாலிவுட்டில் தென்னிந்தியராக இருப்பதால் தாழ்வான நடத்தையை சந்தித்ததாக கூறினார்.

Published on: February 20, 2026 at 7:32 pm

சென்னை, பிப்.20, 2026: நடிகை ரெஜீனா கசாண்ட்ரா தனது தென்னிந்திய மற்றும் இந்தி திரைப்படங்களுக் இடையே தனது தொழில்முறை குறித்து தி இந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துக்கொண்டார்.
அப்போது, பாலிவுட்டில் தென்னிந்தியராக இருப்பதால் தாழ்வான நடத்தையை சந்தித்ததாக கூறினார். மேலும், தன்னை எவ்வாறு ஸ்டீரியோடைப் செய்தார்கள், மேலும் பல விஷயங்களைப் பற்றி பேசினார்.

இது குறித்து பேசிய நடிகை ரெஜீனா, “ஹிந்தி திரைப்படத் துறையில் என்னைச் சுதந்திரமாக உணர்வதற்கு நேரம் எடுத்துக் கொண்டேன். ஏனெனில், நான் ஒரு தென்னிந்திய நடிகை. பெரும்பாலான தென்னிந்தியர்களுடன் ஒப்பிடும்போது, என் ஹிந்தி மிகவும் சிறந்தது.
நான் ஹிந்தியைப் படிக்கவும், எழுதவும், பேசவும் முடியும், மேலும் இதுவரை நான் செய்த அனைத்து பணிகளும் என் சொந்த குரலில் தான். அது என் சொந்த ஹிந்தி, எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நான் தகுதியானவளாக இருக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன்.” என்றார்.

எனினும், பலமுறை அவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்பதற்காகவே இந்தத் துறையில் வெளிநாட்டவர் போல உணரச் செய்யப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இது குறித்து பேசிய நடிகை ரெஜீனா, ““பலர் என்னை தாழ்வாக நடத்தினர்; வார்த்தைகளால் மட்டுமல்ல, செயல்களாலும். அது என்னை நோக்கி ஒரு தாழ்வான பார்வை போல இருந்தது. யாரும் பார்த்தாலே, என்னை ஒரு விதத்தில் தாழ்த்திப் பேசுகிறார்கள் என்பதை உணர முடியும். நான் அதை உணர்ந்தேன். அதனால், வடஇந்தியாவில் எனக்கு சில தயக்கங்கள் இருந்தன. ஆனால், அதைப் போல எப்போதும் இல்லை. சரிதானே” என்றார்.

இதையும் படிங்க: ஒருவர் வெற்றியில் மற்றவர் மகிழ்ச்சி.. விஜய், அஜித் போட்டியில்லை.. ஷாலினி ஓபன் டாக்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com