Samantha: நடிகை சமந்தா தனது முதல் குழந்தையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.
Samantha: நடிகை சமந்தா தனது முதல் குழந்தையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

Published on: July 15, 2026 at 12:13 pm
ஹைதராபாத், ஜூலை 15, 2026: நடிகை சமந்தா ரூத் பிரபு தனது முதல் குழந்தையை எதிர்பார்க்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். அவர் எப்போதும் தாயாக வேண்டும் என்ற ஆசையை கொண்டிருந்ததாகவும், இந்த தருணத்திற்காக நீண்ட காலமாகக் காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சமந்தா, இயக்குநர்- தயாரிப்பாளர் ராஜ் நிடிமோருவுடன் 2025 டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார். ஜூன் மாதத்தில் இருவரும் கர்ப்பம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர். சமீபத்தில் வெளியான ‘மா இன்டி பங்காரம்’ திரைப்பட வெற்றியிழாவில் அவர் தனது கர்ப்பத்தை உறுதிப்படுத்தினார்.
அப்போது ரசிகர்களிடம், “இது எனக்கு புதியதும் சுவாரஸ்யமானதும். ஆனால் நான் இந்த தருணத்திற்காக நீண்ட காலமாகக் காத்திருந்தேன். எப்போதும் தாயாக வேண்டும் என்று விரும்பினேன். எனவே இதற்கு முழுமையாக அர்ப்பணிக்கப் போகிறேன்” என்று கூறினார்.
அவர் மேலும், “எப்போதும் வாழ்க்கையில் ஆர்வத்துடன் செயல்பட்டேன். ஆனால் இப்போது கர்ப்பம் எனக்கு புதிய வலிமையும் நோக்கமும் அளிக்கிறது. இந்த பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். தினமும் புதியதை கற்றுக்கொள்கிறேன், நன்றியுணர்வுடன் இருக்கிறேன், வரும் மாற்றங்களை ஏற்கத் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சமந்தா தனது கர்ப்பத்திற்குப் பிறகு சிறிய இடைவெளி எடுத்து, விடுப்பு செல்லவுள்ளதாகவும், அதன் பிறகு மீண்டும் ரசிகர்களுக்காக புதிய படங்களுடன் திரும்புவதாகவும் கூறியுள்ளார். ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் தற்போது ₹100 கோடி வசூலை கடந்துள்ள நிலையில், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்கிறார்.
இதையும் படிங்க : அடித்து ஆடும் அஜய் தேவ்கன் படம்.. தமால் 4 பாக்ஸ் ஆபிஸில் எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com