Mrunal Thakur : “நான் எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்த விரும்புகிறேன்” என்று நடிகை மிருணால் தாகூர் தெரிவித்துள்ளார்.
Mrunal Thakur : “நான் எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்த விரும்புகிறேன்” என்று நடிகை மிருணால் தாகூர் தெரிவித்துள்ளார்.

Published on: April 13, 2026 at 2:44 pm
ஹைதராபாத், ஏப்.13, 2026: ‘சீதா ராமம்’, ‘ஹை நண்ணா’, ‘ஃபாமிலி ஸ்டார்’ ஆகிய படங்களுக்குப் பிறகு, மிருணால் தாகூர் மீண்டும் தெலுங்கு ரசிகர்களை கவரத் தயாராகிறார். அவரது புதிய படம் ‘டகாய்ட்’ மூலம் அவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தைப் பற்றியும், தன் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்யும் முறையையும் குறித்து அவர் திறந்த மனதுடன் பேசியுள்ளார். அதில், “எனக்கு சவாலான கதாபாத்திரங்கள் பிடிக்கும். ஒவ்வொரு முறையும் புதிய அனுபவம் தரும் கதைகளைத் தேர்வு செய்வதே என் நோக்கம்” என்று கூறியுள்ளார்.

மேலும், படத்தின் கதாபாத்திரம் குறித்து கூறுகையில், “சரஸ்வதியின் பாத்திரம் மிகவும் கடினமானது; இருப்பினும், ஒரு நடிகையாக புரிந்துகொண்டு நடிப்பதற்கு எளிதாக இருக்கும் வகையில் தயாரிப்பாளர்கள் கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளனர்.

ஒரு நடிகையாக, சவாலான பாத்திரத்தை ஏற்றுக்கொள்வது எப்போதுமே உற்சாகமாக இருக்கிறது. சரஸ்வதியாக நடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து.. மீண்டும் திரையில் அமர்களம்.. தேதி தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com