தமிழ் திரையுலகிலும் அந்தப் பிரச்னை: மூத்த நடிகர்கள் சொல்வார்களா? லட்சுமி ராமகிருஷ்ணன்

தமிழ் திரையுலகிலும் பெண்கள் மீதான வன்கொடுமை நிகழ்கிறது என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினார்.

Published on: August 29, 2024 at 6:02 pm

Lakshmi Ramakrishnan |தமிழ்த்திரை உலகிலும் பெண்கள் மீதான வன்கொடுமை நிகழ்ந்து கொண்டிருக்கிறது என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகை, இயக்குனர் என பன்முகம் கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன், “தமிழ்த்திரை உலகிலும் பெண்கள் மீதான வன்கொடுமை நிகழ்ந்து கொண்டிருக்கிறது” என்றார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், “அதிகாரத்தை வைத்து சுரண்டல்கள் செய்ய மாட்டேன் என தைரியமாக சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், அருள் நிதி, விஜய், அஜித் சொல்வார்கள்.
ஆனால், இதற்கு முன்பு உள்ள நடிகர்கள் இப்படி சொல்வார்களா? சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம்” என்றார்.

தொடர்ந்து, ஆமீர் கான் குறித்து பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன், “பெண்களை பற்றி புரிந்துக் கொண்டு ஆமீர் கான் தற்போது ஒரு விஷயத்தை பேசினார்.
கடந்த காலத்தில் பெண்கள் பற்றிய தப்பான பாடல்களுக்கு நான் உதடு அசைத்துள்ளேன். இது தவறு என்று உணர்கிறேன். ஸாரி” என்று கூறினார் என்றார்.

இதையும் படிங்க இளம் நடிகை ஹோட்டலில் பலாத்காரம்: நடிகர் சித்திக் மீது வழக்குப்பதிவு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com