சர்ச்சைப் பேச்சு தொடர்பான வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு சென்ன எழுப்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சர்ச்சைப் பேச்சு தொடர்பான வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு சென்ன எழுப்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
Published on: November 21, 2024 at 10:43 am
Updated on: November 21, 2024 at 2:49 pm
Kasthuri controversial speech Case | தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி நவம்பர் 3ஆம் தேதிஹிந்து அமைப்பு நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரி (50) தெலுங்கர்கள் குறித்து தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சை ஆகின.
தொடர்ந்து இந்த கருத்துக்களை திரும்ப பெற்ற நடிகை கஸ்தூரி, “தெலுங்கர்களை புண்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல; எனது கருத்துக்களை முழுமையாக நான் திரும்பப் பெறுகிறேன்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை எழும்பூரிலும், மதுரை திருநகர் காவல் நிலையங்களிலும் புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில், நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் பிரபாகரன் மனு தாக்கல் செய்தார். கஸ்தூரியின் குழந்தையின் நிலைமையை கருத்தில் கொண்டு சென்னை மாநகர காவல்துறை தரப்பில் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இந்த மனு நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கஸ்தூரிக்கு எழும்பூர் 14 ஆவது நீதிமன்ற நீதிபதி தயாளன் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை 10 மணி அளவில் எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க சிவகார்திகேயனுக்கு வில்லனாகும் ஜெயம் ரவி !
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com