“வாழ்நாள் முழுவதும் துணையாக இருப்பேன்”… மகனுடன் முதல் புகைப்படம் பகிர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ் !

Madhampatty Rangaraj: ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுடனான சட்டப் போராட்டத்திற்கு மத்தியில், பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மகன் ராகா ரங்கராஜுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, வாழ்நாள் முழுவதும் மகனுக்கு உறுதுணையாக நிற்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

Published on: July 31, 2026 at 3:21 pm

சென்னை, ஜூலை 31, 2026: பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுடனான சட்டப் போராட்டங்களுக்கு மத்தியில், தனது மகன் ராகா ரங்கராஜுடன் இருக்கும் புகைப்படத்தைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், “என் மகனுக்காக வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக நிற்பேன்” என்று குறிப்பிட்டுள்ள அவர், கடந்த ஆறு மாதங்களாகக் குழந்தைகளுக்கான அனைத்துப் பொறுப்புகளையும் அன்போடும் அர்ப்பணிப்போடும் நிறைவேற்றி வருவதாகவும், இனிவருங் காலங்களிலும் மகனுக்குத் தேவையான அனைத்தையும் தொடர்ந்து செய்து தருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஏற்கனவே திருமணமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை இரண்டாவது திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகக் கூறி, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கிய நிலையில், இது தொடர்பான வழக்கு நீதிமன்ற நிலுவையிலும் இருந்து வருகிறது. இத்தகைய சட்டப் போராட்டங்கள் நடைபெற்று வந்த சூழலில், கர்ப்பத்தின் இறுதி கட்டத்தில் இருந்த ஜாய் கிரிஸில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

வழக்கு விசாரணையின் போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டிஎன்ஏ (DNA) பரிசோதனையில் குழந்தை ரங்கராஜின் உயிரியல் மகன் என்பது உறுதி செய்யப்பட்டால், அக்குழந்தையின் வாழ்நாள் முழுமைக்குமான பொறுப்பை ஏற்கத் தயார் என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட அறிக்கையில், டிஎன்ஏ பரிசோதனை அறிக்கை மூலம் ராகா ரங்கராஜின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், சட்டப் போராட்டங்களின் பின்னணியில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தையும் இந்த விளக்கத்தையும் பதிவிட்டுள்ளது இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், இந்தச் சமூக வலைதளப் பதிவைத் தொடர்ந்து நீதிமன்ற வழக்கிலோ அல்லது சட்ட நடவடிக்கைகளிலோ தற்போதைக்கு வேறு எந்தப் புதிய திருப்பங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மம்முட்டியின் புதிய படம்.. காரைக்குடியில் தொடங்கிய படப்பிடிப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com