Narendra Modi: மேற்காசிய போர் சூழலில், இந்தியர்களின் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்துகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Narendra Modi: மேற்காசிய போர் சூழலில், இந்தியர்களின் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்துகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Published on: March 29, 2026 at 10:28 pm
Updated on: March 29, 2026 at 10:29 pm
பாலக்காடு (கேரளம்), மார்ச் 29, 2026: பாலக்காட்டில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மேற்காசியாவில் நடைபெற்று வரும் நெருக்கடியின் போது, மத்திய அரசு இந்தியர்களின் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொண்டுள்ளது. கேரள மாநிலத்திலிருந்து பெருமளவு மக்கள் அங்கு வசித்து வருகின்றனர்” என்றார்.
The selfish politics of LDF and UDF have cost Keralam dearly. Development was forever stalled. Now, it’ll change with the huge support NDA is getting. pic.twitter.com/TxtKnxONHx
— Narendra Modi (@narendramodi) March 29, 2026
மேலும் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மேற்காசியாவில் நிலவும் சூழ்நிலையை அரசு நெருக்கமாகக் கண்காணித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட நாடுகளின் தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறோம்” என்றார்.
மேலும், இந்திய தூதரகங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு, அங்கு உள்ள குடிமக்களுக்கு உதவி செய்து வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி இந்த நுணுக்கமான பிரச்சினையை அரசியல் லாபத்திற்காக ஆபத்தான கருத்துக்களை வெளியிட்டு அரசியலாக்குவதாக அவர் விமர்சித்தார்..
இதையும் படிங்க: நிதி மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல்.. தி.மு.க. எம்.பி வில்சன் பேச்சு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com