West Asia Conflict Halts F1 Grands Prix: ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருந்த பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளை, மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதலின் காரணமாக ஃபார்முலா 1 ஒத்திவைத்துள்ளது.
West Asia Conflict Halts F1 Grands Prix: ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருந்த பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளை, மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதலின் காரணமாக ஃபார்முலா 1 ஒத்திவைத்துள்ளது.

Published on: March 16, 2026 at 1:51 pm
துபாய், மார்ச் 16, 2026: பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகள் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருந்தன. இந்தப் போட்டிகளை, மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதலின் காரணமாக ஃபார்முலா 1 ஒத்திவைத்துள்ளது.
ஃபார்முலா 1, ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருந்த பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகள் மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போரின் காரணமாக நடைபெறாது என்று அறிவித்துள்ளது. லிபர்டி மீடியா நிறுவனத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு நிர்வாக அமைப்பான எஃப்.ஐ.ஏ (FIA) வெளியிட்ட அறிக்கையில், இந்தப் போட்டிகள் அடுத்த மாத காலண்டரில் மாற்றுப் போட்டிகளால் நிரப்பப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நமன் விருதுகள் 2026.. ராகுல் முதல் ஸ்மிருதி மந்தனா வரை.. யார் யாருக்கு கௌரவம்? முழு விவரம்!
மேலும், மாற்று வாய்ப்புகள் பரிசீலிக்கப்பட்டாலும், ஏப்ரல் மாதத்தில் மாற்றுப் போட்டிகள் நடத்தப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் போட்டிகள் ஏப்ரல் 12 அன்று பஹ்ரைனிலும், ஏப்ரல் 19 அன்று சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரிலும் போட்டிகள் நடைபெறவிருந்தன.
இது குறித்து, எஃப்.1 தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்டெஃபானோ டொமெனிகாலி, “இது கடினமான முடிவு என்றாலும், தற்போதைய மத்திய கிழக்கு நிலைமையை கருத்தில் கொண்டு, சரியான முடிவாகும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உலக கோப்பை ஹாக்கி.. இந்திய மகளிர் அணி தகுதி!
Iyarkai : ‘நான்சி, கேப்டனே வந்து உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நான் விரும்பினது விரும்புனத தான்; இந்த மோதிரம் இதனால் வரைக்கும் அவன் ஞாபகம், என் உயிரைக் கொடுத்து எடுத்து இருக்கேன். இன்னைல இருந்து இது ஏன் ஞாபகம்’ என நடிகர் ஷாம் பேசும் காட்சிகள் இன்றளவும் பலருக்கும் ஃபேவரைட். உங்களது மனதில் கையை வைத்து சொல்லுங்கள் யாருக்கெல்லாம் இந்த இயற்கை திரைப்படம் பிடிக்கும்?
Crocodile Rescue: குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, வீட்டின் குளியலறைக்குள் புகுந்த 7 அடி நீள முதலை வனத்துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இயற்கை குளத்தில் விடப்பட்டது.
Mekedatu Row: மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழக அரசு சட்டப் போராட்டத்தை தீவிரமாக தொடரும் என்றும், தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க உச்சநீதிமன்றமே ஒரே வழி என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com