சென்னை; 4 பெண்கள் மீது தாக்குதல்.. இளைஞர் கைது!

Chennai: சென்னை காசிமேட்டில் 4 பெண்களை தாக்கியதாக, 23 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Published on: March 9, 2026 at 8:19 pm

Updated on: March 9, 2026 at 8:21 pm

சென்னை, மார்ச் 9, 2026: காசிமேடு போலீசார், வெள்ளிக்கிழமை நடந்த வாக்குவாதத்தின் போது நான்கு பெண்களை (15 வயது சிறுமி உள்பட) தாக்கியதாக கூறி 23 வயது இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் இருந்தபோதும் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த பெண்கள் தற்போது மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர் காசிமேடு பகுதியைச் சேர்ந்த கவின் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எல்.எல்.பி படித்து வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், அவர் அதற்கான ஆவணங்களை வழங்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், கவின் எந்த அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர் என்பதை போலீசார் உறுதிப்படுத்தவில்லை; ஆனால் அவர் ஆளும் கட்சியுடன் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், வெள்ளிக்கிழமை பப்பி மற்றும் தமிழரசி என்ற இரண்டு பெண்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது தீவிரமடைந்தபோது, இருவரும் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்தனர். பப்பிக்கு ஆதரவாக கவின் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் மரணம்.. விஜய்க்கு சி.பி.ஐ நோட்டீஸ்.. நாளை விசாரணை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com