நேபாள பொது தேர்தல்.. 1.80 கோடி மக்கள் வாக்களிக்கிறார்கள்!

Nepal elections: நேபாள நாட்டில் பொதுத் தேர்தல் மார்ச் மாதம் ஐந்தாம் தேதி நடைபெறுகிறது; இந்த பொது தேர்தலில் 18 மில்லியன் மக்கள் வாக்களிக்க உள்ளார்கள்.

Published on: March 4, 2026 at 11:22 am

காட்மாண்டு மார்ச் 4 2026;நேபாளத்தில் வரும் நாளை (மார்ச் 5 ஆம் தேதி), 1.8 கோடி மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். தேர்தலுக்கு முன் 48 மணி நேரம், மௌன காலம் (Silence Period) நடைமுறையில் இருக்கும்; இந்த நேரத்தில் எந்தவித அரசியல் பிரசாரமும் நடைபெறாது.

தேர்தலுக்கான அனைத்து தயாரிப்புகளும் நிறைவடைந்துள்ளன. நியாயமான மற்றும் சீரிய தேர்தலை உறுதி செய்ய, நேபாள தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தியுள்ளது.

இந்த மார்ச் 5 பொதுத் தேர்தல் நேபாளத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும், ஏனெனில் சுமார் 80 லட்சம் ஜென் Z இளைஞர்கள் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.

ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு கையொப்பமிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் வழங்கப்படும்:

ஒன்று, தங்கள் தொகுதியில் விரும்பிய வேட்பாளருக்கான First Past the Post முறையில் வாக்களிக்க. மற்றொன்று, Proportional Representation முறையில் மத்திய அரசில் தங்களை வழிநடத்த விரும்பும் கட்சியைத் தேர்ந்தெடுக்க. பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு கட்டிடங்கள் வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படுகின்றன. வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்கும்.

வாக்காளர்கள், தங்களின் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை காட்டி வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தலாம். நேபாள பொதுத் தேர்தலில், 65 அரசியல் கட்சிகளிலிருந்து (சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட) மொத்தம் 3,406 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

விகிதாசார பிரதிநிதித்துவம் (Proportional Representation) பிரிவிற்காக, 63 கட்சிகள் மட்டுமே தங்களின் மூடப்பட்ட வேட்பாளர் பட்டியலை (Closed List of Candidates) சமர்ப்பித்துள்ளன.

இதையும் படிங்க: 150 பள்ளி மாணவிகள் பலி: ஈரானில் பல்லாயிரக்கணக்கானோர் ஊர்வலம்

ஓமனில் ட்ரோன் தாக்குதலில் இந்தியர் மரணம்.. குவைத்தில் அமெரிக்க விமானங்கள் மீது துப்பாக்கிச் சூடு! US Iran War

ஓமனில் ட்ரோன் தாக்குதலில் இந்தியர் மரணம்.. குவைத்தில் அமெரிக்க விமானங்கள் மீது துப்பாக்கிச்

இஸ்ரேல், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை.. ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை.! Israeli airstrike on Iran

இஸ்ரேல், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை.. ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை.!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com