வாஷிங்டன், பிப்.2, 2026: உலக சுகாதார அமைப்பின் தலைவர், நிபா வைரஸ் பரவலுடன் தொடர்புடைய பாதிப்புகள் இந்தியாவிலேயே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன, மற்ற எந்த நாட்டிலும் இதுவரை பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியெசஸ் சனிக்கிழமை (ஜன.31, 2026) கூறுகையில், ““நிபா வைரஸ் சம்பவங்கள் அரிதானவை, ஆனால் மிகவும் தீவிரமானவை” என்று எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து, “இந்தியாவில் மேற்குவங்கத்தில் பதிவான இரண்டு நிப்பா வைரஸ் தொற்று சம்பவங்கள், 1998-இல் வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து இந்த மாநிலத்தில் பதிவான மூன்றாவது சம்பவமாகும்” என ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும், “இந்திய அதிகாரிகள் 190-க்கும் மேற்பட்ட தொடர்புகளை கண்காணித்து வருகின்றனர், இதுவரை யாருக்கும் நோய் உருவாகவில்லை.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, அதிகாரிகள் நோய் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளை அதிகரித்துள்ளனர். சுகாதார அமைப்புகளில் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி தொடர்ந்து தகவல் வழங்கி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அமெரிக்க அதிபருக்கே இந்நிலையா? விமானத்துக்கு என்னப்பா ஆச்சு? பரபரப்பு!
India Falls in Thomas Cup : தாமஸ் கோப்பை பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் பிரான்சிடம் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து இந்தியா வெளியேறியது….
CSK Beat MI : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றியை பதிவு செய்தது….
Palk Strait swimme Ishank Singh :
ஏழு வயது இஷாங்க் சிங், பால்க் ஜலசந்தியைக் கடந்த மிக இளம் வயது நீச்சல் வீரர் என்ற பெருமையைப்…
Delhi Capitals : ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீழ்த்தியது….
Afghanistan Women’s Team : சர்வதேசப் போட்டிகளுக்கு ஆப்கானிஸ்தான் மகளிர் கால்பந்து அணி திரும்புவதற்கு ஃபிஃபா (FIFA) ஒப்புதல் அளித்துள்ளது….
Abhishek Sharma: லாக்டவுன் காலத்தில் யுவராஜ் சிங்கிடம் பயிற்சி பெற்றுள்ளார் அபிஷேக் சர்மா….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்