Betting case in Yuvraj Singh: முன்னாள் கிரிக்கெட்டர் யுவராஜ் சிங், நடிகர் சோனு சூட், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதாலா, உள்ளிட்டோரின் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
Betting case in Yuvraj Singh: முன்னாள் கிரிக்கெட்டர் யுவராஜ் சிங், நடிகர் சோனு சூட், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதாலா, உள்ளிட்டோரின் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

Published on: December 20, 2025 at 4:15 pm
புதுடெல்லி டிசம்பர் 20, 2025; வெளிநாட்டு பெட்டிங் செயலியான 1xBetசெயலி தொடர்பான பணமோசடி வழக்கில் முன்னாள் கிரிக்கெட்டர் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா பாலிவுட் நடிகர் சோனு சூட், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதாலா, உள்ளிட்டோரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த வழக்கில் மொத்தம் ₹7.9 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அவை சோனு சூட்: ₹1 கோடி
மிமி சக்ரபோர்த்தி: ₹59 லட்சம்
யுவராஜ் சிங்: ₹2.5 கோடி
ஷர்மா: ₹1.26 கோடி
உத்தப்பா: ₹8.26 லட்சம்
ஹஸ்ரா: ₹47 லட்சம்
உர்வாஷி ரவுட்டேலாவின் தாயார்: ₹2.02 கோடி சொத்துக்கள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1xBet மற்றும் அதன் துணை பிராண்டுகள் இந்தியாவில் சட்டவிரோத ஆன்லைன் பெட்டிங் செயல்பாடுகளை நடத்தியதாக அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. இந்த பணம் சலுகை வழக்கின் மதிப்பு ரூபாய் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
1xBet-ஐ விளம்பரப்படுத்துவதற்காக பிரபலங்கள் தெரிந்தே வெளிநாட்டு நிறுவனங்களுடன் அதன் மாற்று நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தங்களைச் செய்திருப்பது ED விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த பணம் சட்டவிரோத பெட்டிங் மூலம் உருவான வருமானத்தில் இருந்து வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று விசாரணை நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க ₹50 கோடி நஷ்ட ஈடு கோரி சௌரவ் கங்குலி வழக்கு.. மெஸ்ஸி வருகை.. தொடரும் சர்ச்சை.!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com