Vanniyar reservation protest: டிசம்பர் 17 வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுப் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்.
Vanniyar reservation protest: டிசம்பர் 17 வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுப் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்.

Published on: November 16, 2025 at 12:32 pm
சென்னை, நவ.16, 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நமக்கே உரித்தான கற்களும், முட்களும் நிறைந்த சமூகநீதியை நோக்கிய இன்னொரு போராட்டப் பாதையில் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு குறைந்தது 15% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் திசம்பர் 17&ஆம் தேதி புதன்கிழமை தமிழகம் முழுவதும் நாம் நடத்தவிருக்கும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டத்தைப் பற்றி தான் நான் குறிப்பிடுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர் என்பதை நான் அறிவேன்.
தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் அழிக்க முடியாத இன்னொரு முத்திரையை பதிக்கவிருக்கும் நமது போராட்டத்திற்கு சரியாக இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதை நினைவூட்டுவதற்காகவும், எரியும் தீபத்தின் திரியை பெரிதாக்கி ஒளியைக் கூட்டுவதைப் போல, சமூகநீதிப் போராட்டத்திற்காக நீங்கள் மேற்கொண்டு வரும் ஏற்பாடுகளை விரைவுபடுத்தவும், விரிவுபடுத்தவும் தான் உங்களுக்கு இந்த மடலை வரைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : 107-ஆம் நாளாக போராடும் தூய்மைப் பணியாளர்கள்.. உணவு வழங்குவதாக திமுக மார்தட்டுவது கொடூரமான நகைச்சுவை.. அன்புமணி ராமதாஸ்
மேலும், “தமிழ்நாட்டின் சாபம், குறிப்பாக சமூகநீதியின் சாபம் தான் தமிழ்நாட்டின் இன்றைய ஆட்சியாளர்கள். சமூகநீதி என்ற சொல்லின் உணர்வையும், பொருளையும் அறியாதவர்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் நம்பிக்கைத் துரோகம் தான்” எனத் தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், வன்னியர்களுக்கான சமூகநீதியை இனியும் தாமதிக்கக் கூடாது என்று நினைத்து உடனடியாக வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றும் அளவுக்கும் திசம்பர் 17&ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் அமைய வேண்டும்.
அதற்கேற்ற வகையில் போராட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். போராட்டக் களத்தில் உங்களுடன் கைக்கோர்த்து போராடுவதற்கான நாளை எண்ணி, எண்ணி காத்துக் கொண்டிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ஆந்திராவுக்கு சென்ற ரூ.1720 கோடி முதலீடு.. எத்தனைக் காலம் தான் ஏமாற்றும் திமுக அரசு? அன்புமணி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com