Rishab Shetty: காந்தாரா சாப்டர் 1 வசூலில் ரூ.500 கோடியை கடந்துள்ள நிலையில், நடிகர் ரிஷப் ஷெட்டி மும்பை சித்தி விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
Rishab Shetty: காந்தாரா சாப்டர் 1 வசூலில் ரூ.500 கோடியை கடந்துள்ள நிலையில், நடிகர் ரிஷப் ஷெட்டி மும்பை சித்தி விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
Published on: October 11, 2025 at 11:40 am
மும்பை, அக்.10, 2025: நடிகர் ரிஷப் ஷெட்டியின், காந்தாரா அத்தியாயம் 1 மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 2022 ஆம் ஆண்டு வெளியான காந்தாரா படத்தின், அத்தியாயம் 1 தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படம் நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை முறியடித்து வருகிறது.
இந்த நிலையில், நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ரிஷப் ஷெட்டி மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்தினார். அப்போது, வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை முண்டு அணிந்திருந்த ரிஷப் ஷெட்டி, சில நொடிகள் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு, பின்னர் தனது காரில் ஏறி சென்றார்.
காந்தாரா சாப்டர் 1 படம்
காந்தார அத்தியாயம் 1 – படத்தின் நிகழ்வுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும். இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம் மற்றும் குல்ஷன் தேவையா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க : காலா ஹுமா குரேஷி-யின் மகா ராணி சீசன் 4.. அரசியல் டிராமா ரிலீஸ் தேதி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com