தொண்டர் உழைப்பு சுரண்டல்.. வாரிசு அரசியலுக்கு ரோல்மாடல் தி.மு.க.. எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு

Edappadi Palaniswami : குடும்ப ஆட்சிக்கு தி.மு.க.தான் ரோல் மாடல் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களின் உழைப்பை சுரண்டும் கட்சி தி.மு.க. என்றும் விமர்சித்தார்.

Published on: September 24, 2025 at 5:10 pm

சென்னை, செப்.24, 2025: எடப்பாடி பழனிசாமி குடும்ப ஆட்சிக்கு தி.மு.க.தான் ரோல் மாடல் என குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக பேசிய அவர், “திமுக அரசு 4 ஆண்டுகளில் ஒரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைக்கூட கொண்டு வரவில்லை; கடன் வாங்குவது, வாரிசு அரசியல், ஊழல், டாஸ்மாக்கில் 10 ரூபாய் வாங்குவது, பொய் வாக்குறுதிகளை வழங்குவது என காலத்தை கடத்திவருகிறது. மேலும், எங்கள் (அதிமுக) திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதில்தான் ரோல் மாடலாக இந்த அரசு உள்ளது” என்றார்.

உழைப்பு சுரண்டல்

தொடர்ந்து, “கருணாநிதி குடும்பம் இருக்கும்வரை திமுக-வில் யாரும் உயர்ந்த பதவிக்கு வரமுடியாது; தொண்டர்கள் உழைப்பை சுரண்டும் கட்சி அது” எனவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

அ.தி.மு.க. வெற்றி பெறும்

இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க முதலிடம் வரும் என்றார் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக பேசிய அவர், “அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றியடைந்து முதலிடத்திற்கு வரும். இரண்டாவது இடத்திற்குத்தான் போட்டி நடந்து வருகிறது” என்றார்.

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் பிளவு

இதையடுத்து, தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “யாசகம் கேட்பவர்கள் எப்படி தங்கள் சட்டையிலுள்ள ஓட்டையை மறைக்க, ஒட்டுப்போட்ட சட்டை போடுவார்களோ, அப்படித்தான் காங் தலைவர் செல்வப்பெருந்தகை திகழ்கிறார்” என்றார்.

தொடர்ந்து, “இப்போதுள்ள காங்கிரஸ் கட்சியை வளர்க்க அவர் விரும்பவில்லை. உண்மையான காங். தொண்டனாக இருந்திருந்தால், ஆட்சியில் பங்கு கேட்காதீர்கள் என சொல்லியிருக்க மாட்டார். திமுக-வை தாங்கிப்பிடிக்கும் எண்ணம் மட்டுமே அவரிடம் உள்ளது” என்றார்.
மேலும், “ கே.எஸ்.அழகிரி போன்ற காங். நிர்வாகிகள் பலரும், ஆட்சியில் பங்கு கேட்க தொடங்கிவிட்டனர். காங். – திமுகவில் பிளவு ஆரம்பித்துவிட்டது” என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சுயமரியாதை கூட்டணி

இதையடுத்து, அ.தி.மு.க. பா.ஜ.க கூட்டணியை சுயமரியாதை கூட்டணி என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக, பாஜகவின் அடிமை என்கிறார் ஸ்டாலின். அதிமுக-வில் தலைவர் மட்டுமல்ல… தொண்டன்கூட யாருக்கும் அடிமையல்ல.
நீங்கள்தான் கூட்டணியின் பலத்தால் இருக்கின்றீர்கள். சுயமரியாதையோடு இருப்பதே எங்கள் கூட்டணி” என்றார்.

இதையும் படிங்க : நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்.. நான் இருக்கிறேன்.. மு.க ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com