BMW Car Crash Case in delhi: டெல்லியில் பி.எம்.டபிள்யூ காரை இயக்கி பெரும் விபத்தை ஏற்படுத்திய பெண் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
BMW Car Crash Case in delhi: டெல்லியில் பி.எம்.டபிள்யூ காரை இயக்கி பெரும் விபத்தை ஏற்படுத்திய பெண் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
Published on: September 15, 2025 at 2:48 pm
டெல்லி, செப்.15: தேசிய தலைநகர் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை (செப்.14, 2025) நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் பி.எம்.டபிள்யூ கார் மோதி உயிரிழந்தார். இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த பெண் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
முன்னதாக விபத்தில் படுகாயம் அடைந்த நிதி அமைச்சக அதிகாரி மற்றும் அவரது மனைவி ஆகியோர் டெல்லி ஜி.டி.பி நகரில் உள்ள நுலைஃப் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நிதி அமைச்சக அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பி.எம்.டபிள்யூ காரை இயக்கிய பெண்ணை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க: பெண் மாவோயிஸ்ட் தலைவர் சரண்.. தெலங்கானாவில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com