MDMK: மதிமுக இயக்கத்துக்கும், முதன்மை செயலாளருக்கும் உறுதுணையாக இருப்பேன் என மல்லை சத்யா திடீர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
MDMK: மதிமுக இயக்கத்துக்கும், முதன்மை செயலாளருக்கும் உறுதுணையாக இருப்பேன் என மல்லை சத்யா திடீர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Published on: April 20, 2025 at 8:04 pm
சென்னை, ஏப்.20 2025: ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சி.ஏ சத்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக ஊடகங்களில் வந்த பதிவுகளால் கழகத்தில் கசப்புணர்வு ஏற்படுகின்ற நிலையும், அதனால் மறுமலர்ச்சி தி.மு.கவின் கட்டுப்பாட்டுக்கு ஊறு நேருகின்ற நிலையும் ஏற்பட்டதற்கு இன்று கழக நிர்வாகக் குழுவில் எனது மனப்பூர்வமான வருத்தத்தை என் உயிர் தலைவர் வைகோவிடமும், நிர்வாகக் குழு உறுப்பினர்களிடமும் தெரிவித்துக் கொண்டேன்.
இது போன்ற சூழல் இனி எதிர்காலத்தில் நிகழாது. திராவிட ரத்னா தலைவர் வைகோவுக்கு, கழகத்தின் எதிர்காலம் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று நான் உறுதி அளித்தேன்.
இதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு துரை வைகோ முதன்மைச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவேன் என்று நிர்வாகக் குழுவில் அறிவித்தது எனக்கும், கழகத் தோழர்களுக்கும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நானும், முதன்மைச் செயலாளர் சகோதரர் துரை வைகோ அவர்களும் இணைந்த கரங்களாக தலைவர் வைகோ அவர்களுக்கும், கழகத்திற்கும் துணையாக செயல்படுவோம். கழகத்தைக் கட்டிக் காப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, “தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. வலிவுடன் தழைத்தோங்கி நிற்க பணியாற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ம.தி.மு.க தீர்மானம்; பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com