TTV Dhinakaran Easter greetings: அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், கிறிஸ்தவ பெருமக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்து செய்தி விடுத்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், “அன்பு ஒன்றே நெறி” எனத் தெரிவித்துள்ளார்.
TTV Dhinakaran Easter greetings: அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், கிறிஸ்தவ பெருமக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்து செய்தி விடுத்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், “அன்பு ஒன்றே நெறி” எனத் தெரிவித்துள்ளார்.
Published on: April 20, 2025 at 11:42 am
சென்னை, ஏப்.20 2025: அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “அன்பு மற்றும் கருணையின் அடையாளமான இயேசுபிரான் உயிர்த்தெழுந்த திருநாளை கொண்டாடி மகிழும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “அன்பு ஒன்றே வாழ்வின் நெறி என்பதோடு, பகைவரிடத்திலும் அன்பு பாராட்டி ஒருவருக்கொருவர் ஒற்றுமை உணர்வோடும், பிறருக்கு துன்பம் இழைக்காமலும் வாழ வேண்டும் என்ற இயேசு பிரானின் உயரிய குணங்களை பின்பற்றிட நாம் அனைவரும் இந்த ஈஸ்டர் திருநாளில் உறுதியேற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்த நன்னாளில் அவர் போதித்த அன்பு, கருணை, சகோதரத்துவம், தியாகம், சேவை மனப்பான்மை ஆகியவற்றை பின்பற்றி மக்கள் அனைவரும் சமத்துவ மனப்பான்மையுடன் வாழ்ந்திட வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : “இருள் விரைவாகவே நீங்கும்”: மருத்துவர் ராமதாஸ் ஈஸ்டர் வாழ்த்து!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com