MK Stalin : அமைச்சர்கள் பொன்முடி மற்றும் துரைமுருகனின் பேச்சுக்கள் சர்ச்சையான நிலையில் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
MK Stalin : அமைச்சர்கள் பொன்முடி மற்றும் துரைமுருகனின் பேச்சுக்கள் சர்ச்சையான நிலையில் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Published on: April 18, 2025 at 12:56 pm
சென்னை ஏப்ரல் 18 2025: சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (ஏப்ரல் 17 2025) அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டார்கள். அப்போது அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அமைச்சர்களிடம் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட கூடாது என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
அண்மையில் அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுக்கள்
தந்தை பெரியார் திராவிட கழகத்தின் விழா ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, விலை மாதருடன் சைவம் வைணவத்தை ஒப்பிட்டு பேசினார். இந்த பேச்சு தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும் அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு எதிராக சென்னை காவல் அலுவலகத்திலும் பாரதிய ஜனதா கட்சி உட்பட பல்வேறு தரப்பினர் புகார் அளித்துள்ளனர். பொன்முடியின் பேச்சுக்கு எதிராக அதிமுக சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மேலும் பொன்மொழியின் பேச்சை திமுக எம்பி கனிமொழியும் கண்டித்து இருந்தார். அவரை கட்சியின் பொறுப்பில் இருந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் நீக்கினார்.
அமைச்சர் துரைமுருகன்
திமுக அரசின் மூத்த அமைச்சரான துரைமுருகனும் சர்ச்சையாக பேசி சிக்கி உள்ளார். மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறான கருத்துக்களை அவர் பேசியதாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இந்த பேச்சுக்கு துரைமுருகன் மன்னிப்பு கோரி உள்ளார். அதேபோல் அமைச்சர் பொன்முடியும் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு.. நெல்லை மேலப்பாளையத்தில் முழு கடை அடைப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com