1984 சீக்கிய கலவரம்.. காங்கிரஸ் முன்னாள் எம்.பி.க்கு ஆயுள் தண்டனை!

1984 Sikh riots : 1984 சீக்கிய கலவர வழக்கில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Published on: February 25, 2025 at 2:49 pm

Updated on: February 25, 2025 at 7:00 pm

1984 சீக்கிய கலவரத்தின் போது, டெல்லியில் தந்தை மகன் கலவரக்காரர்களால் கொல்லப்பட்ட வழக்கில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துடன் தொடர்புடைய கொலை வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு டெல்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (பிப்.25, 2025) ஆயுள் தண்டனை விதித்தது.
டெல்லியில், ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோர் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது கொல்லப்பட்டனர்.

ஆயுள் தண்டனை

இந்த கொலை வழக்கில் சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பளித்தார். ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோர் 1984 நவம்பர் 1ஆம் தேதி கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு பிப்ரவரி 12 அன்று தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில் தண்டனை விவரங்கள் இன்று வெளியாகின.

திகார் சிறையில் சஜ்ஜன் குமார்

அதன்படி, சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், அரசு தரப்பும், இந்த வழக்கில் புகார் அளித்துள்ள ஜஸ்வந்த் சிங்கின் விதவை மனைவியும், குமாருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி இருந்தனர்.

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு முதலில் பஞ்சாபி பாக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது, ஆனால் பின்னர் மேலதிக விசாரணைக்காக சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு (SIT) மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க இதுதான் வாழ்க்கையா? இது பிரச்னை.. டூர் சென்ற இஸ்லாமிய விதவை பெண்ணுக்கு மதகுரு எதிர்ப்பு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com