Rail Parcel App: தெற்கு மத்திய ரயில்வே அடுத்த தலைமுறை ரயில் பார்சல் செயலி (Rail Parcel App)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
Rail Parcel App: தெற்கு மத்திய ரயில்வே அடுத்த தலைமுறை ரயில் பார்சல் செயலி (Rail Parcel App)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

Published on: February 26, 2026 at 4:51 pm
புதுடெல்லி, பிப்.26, 2026: தெற்கு மத்திய ரயில்வே அடுத்த தலைமுறை ரயில் பார்சல் செயலி (Rail Parcel App)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய செயலி மூலம், பயணிகள் மற்றும் வணிகர்கள் தங்கள் பார்சல் சேவைகளை எளிதாக பதிவு செய்யலாம். மேலும், பயணிகள் மற்றும் வணிகர்கள் தங்கள் பார்சல் சேவைகளை எளிதாக பதிவு செய்யலாம் என்றும் கட்டண விவரங்கள் மற்றும் சேவை விருப்பங்களை ஆன்லைனில் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, டிஜிட்டல் முறையில் முழுமையான வசதிகளை வழங்கும் வகையில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி, ரயில்வே பார்சல் சேவைகளை மேலும் விரைவாகவும், வெளிப்படையாகவும், பயனாளி நட்பு முறையிலும் மாற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை முதலில் ஹைதராபாத், விஜயவாடா, பெங்களூரு உள்ளிட்ட ஏழு முக்கிய இடங்களில் பைலட் திட்டமாக தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எஸ்.சி.ஆர் நிறுவனம், சரக்கு லாஜிஸ்டிக்ஸ் சந்தையை முழுமையாக ஆய்வு செய்ய ஐ.ஐ.எம் பெங்களூருவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பு, ரயில் அடிப்படையிலான லாஜிஸ்டிக்ஸ் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, 2030க்குள் 3,000 மில்லியன் டன் சரக்கு ஏற்றுமதி என்ற தேசிய இலக்கை அடைய உதவுவதாகும்.
இதையும் படிங்க: ஏ.ஐ அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்திய ஐ.டி. துறை வளர்ச்சி.. நாஸ்காம் கணிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com