Blood Moon: இந்தியாவில் நேற்று (செப்.7 2025) தெரிந்த சிவப்பு நிலவை பலரும் பார்வையிட்டனர். அடுத்த அரிய சந்திர கிரகண நிகழ்வு எப்போது தெரியுமா?
Blood Moon: இந்தியாவில் நேற்று (செப்.7 2025) தெரிந்த சிவப்பு நிலவை பலரும் பார்வையிட்டனர். அடுத்த அரிய சந்திர கிரகண நிகழ்வு எப்போது தெரியுமா?
Published on: September 8, 2025 at 11:13 am
புதுடெல்லி, செப்.8 2025: “இரத்த நிலவு” முழு சந்திர கிரகணம், இந்தியாவிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மில்லியன் கணக்கான வானியல் ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்களை ஒன்றிணைத்தது. இந்த அரிய நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (செப்.7, 2025) நடந்தது. இந்நிலையில், நிலவு சிவப்பு நிறத்தில் மாறியதை நாடு முழுவதிலும் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இந்த அரிய நிகழ்வு கடைசியாக 2018 இல் இந்தியாவில் காணப்பட்டது.
மேலும், “இரத்த நிலவு” என்றும் அழைக்கப்படும் முழு சந்திர கிரகணம், பூமி சூரிய ஒளி சந்திரனை அடைவதைத் தடுக்கும்போது ஏற்படுகிறது. இந்த நிலையில், ஜூலை 27, 2018 க்குப் பிறகு முதல் முறையாக நேற்று நிலவு சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரத்த நிலவு நிகழ்வு 2025 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக நிகழ்ந்தது. கடைசியாக இது மார்ச் மாதத்தில் நிகழ்ந்தது. 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே மிக நீண்ட நிகழ்வாகும்.
அடுத்த நிகழ்வு எப்போது?
இதற்கிடையில் அடுத்த முழு சந்திர கிரகணம் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி, அடுத்த நிகழ்வு 2028ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில்.. ‘ரயில் ஒன்’ ஆப் அறிமுகம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com