Village administrative officer arrested: தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவரிடம் ரூபாய் 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
Village administrative officer arrested: தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவரிடம் ரூபாய் 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
Published on: May 7, 2025 at 11:05 am
தூத்துக்குடி மே 7 2025: தூத்துக்குடியில் ரூபாய் 3000 ஆட்டோ டிரைவரிடம் லஞ்சமாகப் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். தூத்துக்குடியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபாகரன். 49 வயதான இவரின் மனைவி தமிழ்ச்செல்வி ஜனவரி மாதம் இறந்துவிட்டார்.
தமிழ்ச்செல்வியின் பெயரில் 4.50 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் பட்டாவை மாற்ற கிராம நிர்வாக அலுவலர் கணேச மூர்த்தியை ஆட்டோ டிரைவர் பிரபாகரன் அணுகி உள்ளார்.
அப்போது அவர் பட்டா மாற்றத்திற்கு ரூபாய் 3000 லஞ்சமாக கொடுக்குமாறு கூறியுள்ளார். இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரபாகரன் இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரசாயனம் தடவிய ரூபாய் 3000 நோட்டுக்களை பிரபாகரிடம் கொடுத்தனர். அந்த பணத்தை பிரபாகரன் கிராம நிர்வாக அலுவலர் கணேசமூர்த்தி இடம் ஒப்படைத்தார்.
அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கணேசமூர்த்தியை கையும் களவுமாக பிடித்தனர். இதை எடுத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் சோதனையும் நடைபெற்றது.
3000 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க: திருவள்ளூர்; கோவில் குளத்தில் மூழ்கி வேத பாடசாலை மாணவர்கள் மூவர் பலி..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com