TTV Dinakaran: ஓய்வு ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் உயிருக்கு அச்சுறுத்தல இருப்பதாக தெரிவித்துள்ள அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.
TTV Dinakaran: ஓய்வு ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் உயிருக்கு அச்சுறுத்தல இருப்பதாக தெரிவித்துள்ள அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.
Published on: May 3, 2025 at 12:41 pm
சென்னை, மே 3 2025: ஓய்வு ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் புகார் அளித்துள்ளார். தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழலை திமுக அரசும் அதன் முதல்வரும் புரிந்து கொள்வது எப்போது? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், “தூத்துக்குடி மாவட்டம், மொறப்பநாடு வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் கொலையில் தொடங்கி புதுக்கோட்டையில் ஜகபர் அலி, திருநெல்வேலியில் ஜாஹிர் உசேன் என தன்னலம் கருதாது இயற்கை வளங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் சமூக செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்படும் நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கடிதம் எழுதியிருப்பது தமிழகத்தில் எத்தகைய அசாதாரண சூழல் நிலவுகிறது என்பதையே வெளிப்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியராக, பல்வேறு அரசுத் துறைகளின் செயலாளராக, சட்ட ஆணையராக திறம்பட பணியாற்றியதோடு பல்வேறு ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை துணிச்சலுடன் வெளிக்கொண்டுவந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய பாதுகாப்பை தன்னிச்சையாக விலக்கியிருக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அவர்களுக்கு விலக்கப்பட்ட காவல் பாதுகாப்பை உடனடியாக வழங்குவதோடு, விளம்பர மோகத்தை சிறிதுகாலம் ஒதுக்கிவைத்துவிட்டு தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து சிந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : காவல்துறை சரிபார்ப்பை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்; அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com