TN Government: தமிழ்நாட்டில் பிற மாநில இளைஞர்கள் மீது தாக்குதல்கள் நடைபெறவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
TN Government: தமிழ்நாட்டில் பிற மாநில இளைஞர்கள் மீது தாக்குதல்கள் நடைபெறவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

Published on: December 30, 2025 at 11:55 pm
Updated on: December 30, 2025 at 11:58 pm
சென்னை, டிச. 30, 2025: சென்னை அருகே திருத்தணியில் புறநகர் ரயிலில் ரூல்ஸ் எடுத்த மூன்று இளைஞர்கள், கத்தியால் வட மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் என்ற இளைஞரை கொடூரமாக தாக்கினார்கள்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 34 வயதான சூரஜ் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது கண்டனத்தில், ” படிக்க வேண்டிய வயதில் மாணவர்கள் ரீல்ஸ் மோகத்தால் போதை பொருள் நடமாட்டத்தால் சீரழிகிறார்கள்; இதற்கு திமுக அரசின் மோசமான நிர்வாகம் தான் பொறுப்பு” என கூறியிருந்தார்.
தமிழ்நாடு அரசு விளக்கம்
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு இது தொடர்பாக விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரீல்ஸ் மோகத்தில் வடமாநில இளைஞர் மீது தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில் இளைஞர்கள் மூன்று பேர் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது; அவர் ஜாமினில் வெளியில் உள்ளார். மேலும் சமீபத்தில் வட மாநில இளைஞர்கள் மீது தமிழ்நாட்டில் வேறு எந்த தாக்குதல்களும் நடைபெறவில்லை. வட மாநில இளைஞர்கள் தமிழ்நாட்டில் வாழக்கூடிய சாதகமான சூழல் நிலவுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க; சங்கி கூட்டம் 10 நாட்கள் தூங்காது.. திமுக மகளிர் மாநாட்டில் உதயநிதி பரபரப்பு பேச்சு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com